மரணத்தின் தொடக்கத்தில்

பனிப்பொழுதில் சாலையோரம் நின்றிருந்தேன்- என்
ஐவிரல் கோர்த்து எதிரே நின்றாய்,,
பனி நிறைந்த மரங்கள் அனைத்தும் கரைந்துப் போக----கண்கள்
இரண்டும் உன்னைக் காண..,
விழிகள் கவிதை பேசியது,,,,,,
உதடுகள் ஒன்று சேர்வதற்குள்
என் உயிர் உன்னைச் சேர்ந்தது-------உடல்
மண்ணில் விழ
உன் கண்ணீர் துளி மனதில் விழுந்தது,,,,,
விட்டுச் செல்ல நீயோ விரும்பவில்லை,
அழைத்துச் செல்ல எனக்கோ மனமில்லை,
கண்ணீர் துடைக்க கையோ எழவில்லை,
உரைந்துக் கிடைக்கிறேன் உன் மடியில்...........................

எழுதியவர் : கவிமாணவன் (17-Mar-19, 6:25 pm)
சேர்த்தது : Kavimanavan
பார்வை : 109

மேலே