காதல்

கண்ணில்லாக் காதல்
சாதி மதம் பார்க்காதாம்
ஏற்றத்தாழ்வு காணாதாம்
தேசம் மொழி கடந்ததாம்
பெருமைப் பட்டுக்
கொண்ட மனிதம்
ஏளனமாய் சிரித்தது
யாக்கைகள் கடந்து
அவளு(னு)க்காய் மலர்ந்த
இவள்(ன்) காதல் கண்டு!

ஆம் காதல்
ஆண்மைக்கும்
பெண்மைக்கும்
ஆனதன்றோ!

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (17-Mar-19, 8:36 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
Tanglish : kaadhal
பார்வை : 527

மேலே