பெண் பெரிய வார்த்தை பெண்

எவ்வகை கேள்வி பெண்ணின் வாய் வரும் என்று
எம்மத இறைவனுக்கும் எள்ளளவும் தெரியாது
அன்பு மொழி பேசும் நொடியில் ஆர்வத்தில்
எது கூறின் அத்தனையும் வினையாய் மாறி - நம்மை
திக்கிட செய்யும் தெளிவான கேள்வி ஒன்றால்
சித்தம் கலங்கி செய்வதறியாது நிற்க செய்வாள்

பயங்கர கோபத்தால் நீ அவளை பலவாறு பேசிவிடின்
அதனால் அவளின் கோபத்தால் எழும் வார்த்தை
அனலாறு உன்னை தன்னுள் அடியோடு
இழுத்துச் சென்று அழகான தோலை உரித்து
உப்போடு எலும்மிச்சை சாறை ஊற்றி
தெருதோறும் திரியவிட்டால் எந்நிலை தோன்றுமோ
அந்நிலை நம்மை அதி பயங்கரமாய் ஆட்கொள்ளும்.
--நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (22-Mar-19, 6:20 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 863

மேலே