காதல் பரிசு

இதோ நான் எழுதி வைத்த
புதிய புத்தகமடி-இதில்
முன்னுரைப் பக்கங்களில்
என் பார்வையில் காதல் யாது...
தந்தபின் , வரும் பக்கங்களில்
முதல் அத்தியாயம், என் கண்களில்
நான் காணும் உன்னழகு , அதன் பின்னே
பக்கங்களை புரட்டிப்பாரடி , அவை
நம் காதல் யாத்திரையின் கவிதைகள்
பயணத்தில் ஏற்றத் தாழ்வுகள் ,
நம்மிடையே தோன்றி மறைந்த
சிறு பூசல் , ஊடல்கள் என்று
இவற்றையெல்லாம் தாண்டி நிற்கும்
நம்மிடையே நிலவும் நம்மைப்பிணைக்கும்
உயிர் முடிச்சாம் நம் காதல் என்று
பக்கம் பக்கமாய் நம் காதலைப்பேசும்
புதிய புத்தகமடி இது …….. நாளை
இதுவே நம் காதலின் சரித்திர புத்தகமாய்
நம் இளைய தலைமுறையினருக்கு விருந்தாகலாம்
படித்து, களிக்க இன்புற காதலின் மகத்துவம்
புரிந்துகொள்ள , சுரங்கச்சொல்லின்
இன்றுன் பிறந்தநாளுக்கு கவிஞன் நான்
அளிக்கும் இலக்கிய பரிசு
இன்றைய புத்தம் புதிய புத்தகம்,
காதல் கவிதைத்தொகுப்பு ……. நாளைய
சரித்திர ஏடாகலாம் பெண்ணே
ஏற்றுக்கொள்வாயா இதை பரிசாக

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Mar-19, 5:34 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 84

மேலே