அழகிய ஒரு கவி

அழகிய ஒரு கவி எழுது என்றாள்..
எழுதித் தந்தேன் அவள் பெயரை..
சிறு புன்னகையோடு
இது பழைய பஞ்சாங்கம் என்றாள்..
அவள் பெயரின் ஒவ்வொரு எழுத்திலும்
ஓராயிரம் கவிதைகள் ஒளிந்துள்ளதை,
பாவம் அவள் அறியவில்லை..
வாடும் மலரும், தேயும் நிலவும்
கவிதையாய் இருக்கும்போது என்
இதயம் கவர்ந்த என்னவளின்
பெயரும் எனக்கு கவிதை தான்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (25-Mar-19, 7:34 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : alakiya oru kavi
பார்வை : 126

மேலே