ரேஷ் ரசவாதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரேஷ் ரசவாதி
இடம்:  THOOTHUKUDI
பிறந்த தேதி :  06-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Aug-2018
பார்த்தவர்கள்:  3952
புள்ளி:  189

என்னைப் பற்றி...

முதுகலை வேதியியல் மற்றும் முதுகலை கல்வியியல் பட்டம் பெற்ற வேதியியல் ஆசிரியர்... முனைவர் பட்டம் பெற தற்போது தயாராகும் மாணவர்.... தமிழ் மீது கொண்ட பற்றால் மாறிய கவிஞர்.... பேச்சாளர்.... எழுத்தாளர்.... தொகுப்பாளர்...

என் படைப்புகள்
ரேஷ் ரசவாதி செய்திகள்
ரேஷ் ரசவாதி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
01-Apr-2020 9:36 pm

ராதே கிருஷ்ணா

மேலும்

ரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2020 11:23 am

விடியல் தோறும் பார்த்ததிருந்தேன்..
.உம் விரல்கள் கோர்க்க காத்திருந்தேன்,
உம் ஒவ்வொரு பார்வையும் என்னை உருக்குலைக்க ,
நீர் தொடும் நேரமெல்லாம் உணர்வுகள் மயங்க, ஏனோ நான் மட்டும் உண்டான காதலை
எனக்குள்ளே மறைத்திருந்தேன்....

மேலும்

ரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2020 11:20 am

உன் விழி எனும் சிறையினில்
நான் வந்து உறங்கிட..
உன் அமுதூட்டும் பேசினில் என்னை கட்டி அணைத்திட..
மௌனத்திலும் உதடுகள் என் பெயரை சொல்லிட..
உன் இதய கூட்டுக்குள்
இந்த ஏழைக்கு ஒரு இடம் வேண்டும் அன்பே..

மேலும்

ரேஷ் ரசவாதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2019 1:36 am

ஒளிவிலகலின் விலகலை
விலகாமல் எங்களுக்கு
இயற்கையோடு ஒன்றிய
இயற்பியலை கற்றுத்தரும்
இயற்பியல் ஆசிரியர்களே.....

மேலும்

ரேஷ் ரசவாதி - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2018 9:43 am

வளையோசை மெட்டுகளால் இளங்காள எனையடக்கி
மையிருட்டுக் கூந்தலில் மல்லிகையாய் தினஞ்சூடி
தேன்தமிழ் சொல்லெடுத்து தெம்மாங்கு பாடிவரும்
தேவதையே உனக்குள் உயிராகி கரைந்தேன்...

சக்கரையைத் தேடிவரும் கட்டெறும்பாய் என்நெஞ்சம்
அக்கரையில் நீநிற்பதை வாசம் பிடித்ததும்
கடலாடும் அலைகள்போல் கால்கள் நடந்தேன்
கரைமோதும் நுரையாகி உன்கைகளுக்குள் உடைந்தேன்...

கன்னம் வருடுமெழில் காவியத் தூரிகைகளால்
என்னுள்ளச் சிறகுகளில் வண்ணங்களைத் தீட்டியதும்
தென்னம் கீத்தாய் உன்மடியில் சரிந்தேன்
சின்னப் பிள்ளையாய் மதிமுகம் ரசித்தேன்...

ரெட்டைக்குழல் துப்பாக்கிக் கண்கள் சுட்டதும்
தூத்துக்குடி போராட்டக் களம்போல் வீழ்ந்த

மேலும்

போராட்ட களத்தையும் காதல் களமாக மாற்றிய கற்பனை சாலச் சிறந்தது.... உங்கள் கவிதையில் எங்களின் கற்பனை வண்ணமயமாக மிளிர்கிறது... வாழ்த்துக்கள் தோழரே.... இதயம் கனிந்த வாழ்த்துக்கள் இதயம் விஜய்க்கு.... 27-Mar-2019 6:50 pm
தங்கள் கருத்தெனும் நீரூற்றில் என்றன் கவிதைகள் மலர்ந்து மணம் கமழ்கிறது. அகம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பரே... 23-Aug-2018 11:14 am
ஓர் உயர்ரக சிருங்கார ரசக் கவிதை மிகவும் ரசித்தேன் நண்பரே விஜய் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Aug-2018 9:55 am
ரேஷ் ரசவாதி - ரேஷ் ரசவாதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2019 9:57 pm

நம் காதல் எனக்கு பல
சுகங்களை தந்திருந்தாலும் நம் பிரிவு
எனக்கு ஒரு விடயத்தை புரியவைத்தது..
வாழ்வில் யார் மனதிலும் சிறை பட்டு கிடைக்க கூடாது என்று..

மேலும்

ஆசிரியப் பணி சிறந்த பணி. வாழ்க வளமுடன்! எழுத எழுத எல்லாம் சிறக்கும். 19-Mar-2019 10:37 pm
மன்னிக்கவும் ஐயா.. முனைவர் என்று எண்ணி விட்டேன்... ஒரு கண் மருத்துவப் பேராசியரிடம் உரையாடுவிதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு... நான் ஒரு முதுநிலை வேதியியல் ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறேன்.. தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக கவிதை எழுதி வருகிறேன்... உங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கு கிடைக்கட்டும்... 19-Mar-2019 6:28 pm
தங்கள் பதிலுக்கு நன்றி; நான் முனைவரில்லை. அரசுப் பணி நிறைவு பெற்ற கண் மருத்துவப் பேராசிரியர். 19-Mar-2019 5:35 pm
ஆம் கவிதையை தாளில் சரியாக எழுதினேன் ஆனால் இணையத்தில் பதிவிடும் பொழுது எழுத்துப்பிழை வந்துவிட்டது.. மன்னிக்கவும்.. நன்றி உங்களது கருத்திற்கு முனைவர் கனியப்பன் அவர்களே... 19-Mar-2019 5:29 pm
ரேஷ் ரசவாதி - ரேஷ் ரசவாதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2019 12:23 pm

அவளுக்காக எழுதப்பட்ட
கவிதைகள் அனைத்தும் இன்று
அழுதுகொண்டே அனாதையாய் காற்றில் பறக்கிறது..
அவளோ இன்று வேறொருவனோடு
மணமேடையில் ஆனந்தமாய் சிரிக்கிறாள்.

மேலும்

ஒரு நல்ல கலைஞருக்கு பாராட்டு அவரின் குருவிடம் வரும் வாழ்த்துக்களே... அந்த வகையில் ஐயா வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன் தமிழ்பித்தன் அவர்களின் இந்த விமர்சனம் எனக்கு மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது... ஆம் ஐயா அவளைப்பற்றி அவன் எழுதிய கவிதைக்கு வேலை இல்லை தான் ஆனாலும் இந்த கவிதை தானே உங்களை எனக்கு விமர்சனம் எழுத வைத்துள்ளது... நன்றிகள் பல உங்களுக்கு........ 15-Mar-2019 12:43 am
துயரம் அருமை 13-Mar-2019 6:37 pm
அவளே விட்டு போனபின் avalaipattri அவன் எழுதிய கவிதைக்கு இன்னும் என்ன வேலை அதனாதான் அந்த கவிதை ஏடுகள் காற்றில் பறந்து போயினவா……. நல்ல சோகம் தோய்ந்த வரிகள் நண்பரே ரேஷ் ரஸவாதி 13-Mar-2019 1:26 pm
ரேஷ் ரசவாதி - ரேஷ் ரசவாதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2019 12:21 am

ஆண்களின் கண்ணீர் அவ்வளவு
எளிதாக இமைகளை விட்டு
வெளியில் வருவதில்லை..!!
ஏனெனில் தன் கண்ணீர் துளிகள்
மற்றவர்களை கலங்கடித்து
விடும் என்பதற்காகவே....!!

மேலும்

மிக்க மகிழ்ச்சி 08-Mar-2019 12:11 am
கற்பனை கவிதை வரிகள் புதுமை பாராட்டுக்கள் 07-Mar-2019 5:41 am
ரேஷ் ரசவாதி - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2014 8:11 am

வாக்கு பொய்க்காத வண்ணத் தமிழ் கவியே
எமக்கு......
வானம் தலை தட்டியது தமிழன் என்றே தலை நிமிர்ந்ததும்.....!!!!

வானமும் எமை வளரவிடாது
வஞ்சிக்கிறதோ என்று எண்ணியபடி.....

குனிந்தபடி கொஞ்சம் கேட்டோம்
குழந்தைத் தமிழாய் பூமியில் குயிலோசை......!!

இடையில் வந்த இடியோசை என
இங்கிலீசின் இரைச்சல் பிடித்துப் போக......

இதோ இயர்போனை செவியில் மாட்டி
இன்பம் இதுவேயென மயங்கி நிற்கிறோம்.....

வானம் தலை தட்டியதன்
வண்ணம் இப்போது புரிந்தது......

பாரடா அங்கே குயிலோசை உன்
பைந்தமிழ் இனிமை பயில - நீயோ

பறங்கியர் மொழியில் பாசம் வைத்து - தமிழ்
பண்பாட்டை மறந்து நிற்கிறாய்.......

சொல்லிலே

மேலும்

வாழ்த்துக்கு நன்றி தோழமையே 07-Mar-2014 4:17 pm
புரிந்ததா வித்யா இப்போது புகுந்து விட்டால் தமிழ் இடையில் புற்றீசலாய் பிற மொழி பூரிக்கும் தமிழமுதம் கூட பொல்லாத விஷமாகும் என்று....!! பனியைப் போல் குளிர்ந்த நின் பாராட்டு என் கவிப் பணியை தொடர ஊக்குவித்தது....!! நன்றி வித்யா 06-Mar-2014 6:50 pm
ரசனை என்ற துடுப்பு உதவும் வரை-கால ராஜ்யங்கள் வென்று பயணிக்கும் ரம்யக் கவி ஓடம்..... வேண்டுகிறேன் உங்கள் ரசனை மழை விளையவே தொடர்ந்து கவிப் பயிர்.... நன்றி நண்பரே 06-Mar-2014 6:46 pm
உங்கள் கவி ஓடம தமிழ் நதியில் இன்னும் வெகுதுராம் போக நான் இறைவனை வேண்டுகிறேன் 06-Mar-2014 4:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே