அவள் நினைவில்
33. அவள் நினைவில்
ஒத்தவார்த்தை சொல்லிப்புட்டா
உசுருக்குள்ள நின்னுபுட்டா
கண்ணால பேசிப்புட்டா - என்ன
கார்மேகத்துல பறக்கவிட்டா
பட்டாம்பூச்சி பறக்குது
என் நெஞ்சுக்குள்ள - பாவி மனம்
மறந்துடுமோ அவ சொன்ன சொல்ல
ஆசைகள் அலைமோதுது
மெல்ல மெல்ல - என்மீசைக்கும்
மோகம் வருது - மேனி
வருட மெல்ல மெல்ல
கூர்விழியால் கார்குழலால்
தேகம் தீண்ட - மேகம்
உடைக்கும் மழையாய்
காதல் தீண்ட
கடல்சூழியில் மூழ்கி
நான் கரைசேர்கிறேன்
கன்னியின் நினைவினிலே
நான் மறித்து எழுகிறேன் .
மு. ஏழுமலை