வாழ்ந்தவன் யாரோ

இறைவனின் நீதி மன்றம்,

கனம் கனம் காதல் என்றே கண்விழித்தேன்
காலத்தின் கணக்கு
புரியவில்லை எனக்கு
வாழ்க்கையின் வழக்கில்
வக்கீலும் நானே
குற்றவாளியும் நானே
வழக்கில் தோற்றால்
வாழ்வதே தண்டனையாம்
தூக்குத்தண்டனைக் கேட்டால்
மேல்முறையீடு செய் என்றான்
மேல்முறையிட்டுப் பார்தேன்
வழக்கில் கட்டிய வாய்தாவில் வாழ்ந்தவன் யாரோ?......?

- -கல்லறை

எழுதியவர் : கல்லறை செல்வன் (2-Apr-19, 9:22 am)
பார்வை : 175

மேலே