குழந்தை

என் கண்ணே
கரு விழி கயலே.....
மண்ணில் புதிதாய் உதித்த என் விண்மீனே
மழலையின் சத்தமே
தேன் அமிழ்தின் முத்தமே
விரல் பிடித்து வாராய் ...
கடல் அலை போல துள்ளி குதிக்க ...
பறவை போல வளம் வர
தென்றலாய் பூவோடு பேச
கற்பனையில் எட்டாத என் காவியமே
பிரம்மனும் உறைந்து போய் நின்ற என் ஓவியமே ........

எழுதியவர் : (5-Apr-19, 5:09 pm)
சேர்த்தது : sendil
Tanglish : kuzhanthai
பார்வை : 7103

மேலே