பெண்

பூவாக மலர்ந்தாய்
புன்னகையோடு சுழன்றாய்
பூமியின் பிம்பம் வெண்மேகம் என்று நினைத்தாய்
வாழ்வோடு பல கற்பனைகள்
உன் உணர்வோடு பல நல்ல நினைவுகள் .....
கை பிடித்து நடந்த காட்சிகள்
இன்று நிழலாய் கை விட்டு மறைய கண்டாய்
கருணை
காதல் இல்லா
கண்ணியம் இழந்த காம உலகில்
நசுக்க பட்ட பூக்களாய்
தெரு ஓரம் வீச கண்டாய் ...

எழுதியவர் : செந்தில் குமார் அ (5-Apr-19, 5:01 pm)
சேர்த்தது : sendil
Tanglish : pen
பார்வை : 1093

மேலே