கொலுசொலி

எமனின் பாசக் கயிரைதான் கொலுசாக கட்டியிருக்கிறாயா இப்படி உயிரை வாங்குகிறதே...!! அது என்ன மணிமேகலையின் அமுதசுரபியா இப்படி உயிரை வார்க்கிறதே..!!
கோபத்தில் நீ நடந்தால் இடியாய் இடிக்கும் கொலுசு கொஞ்சியே நடக்கும் போது குழலாய் இனிக்கும்....
அன்போடு நடக்கும் போது கோவில் மணியாய் அழைக்கும் ஆசை மோகத்தில் நடக்கும் போது காமராகம் இசைக்கும்..... தூக்கத்தில் இருந்தாலும் வாழ்க்கை குழப்ப ஏக்கத்தில் இருந்தாலும் கொட்டும் சத்தத் தாக்கத்தில் இருந்தாலும் எட்டிடுமே என்னிரு செவியிலும்
உன் இன்னிசை கொலுசொலி......!

எழுதியவர் : சிவா பாலா (8-Apr-19, 10:07 pm)
சேர்த்தது : சிவா பாலா
Tanglish : kolusoli
பார்வை : 228

மேலே