உன்னை மட்டுமே என் மனம் நினைக்கும்
மனம் விட்டு பேசடி
மனத்தால் பேசடி
கண்ணால் பேசியே
மனம் கலவரம் ஆனதடி
கலவரமே குதூகலமாய்
மனம் இன்னும் வேண்டுதடி
இன்னும் ஆசை தூண்டுதடி
எந்த நிழலும் நிஜமில்லை - அது
உனக்கேன் புரியவில்லை
மௌனமாய் சொல்லிடும்
வார்த்தைக்கு உருவம் என்றும் இல்லை
பருவம் பயம் கொடுக்கும்
மனம் பதுங்கிட தினம் நினைக்கும்
உருகிட பரிதவிக்கும்
உன்னை மட்டுமே என் மனம் நினைக்கும்
மனம் நினைக்கும் ....