உன்னிதழ் சிந்திய தேன்தமிழில்தான்

அந்திப் பொழுது அழகுதான்
-----ஆனந்தம் அப்பொழுதில் நீ வந்தால்தான் !
அந்திப் பூக்கள் அழகுதான்
-----அவை உன்னுடன் சேர்ந்து சிரித்தால்தான் !
அந்தி நிலவு ஆகாயத்தில் அழகுதான்
-----அந்த நிலவு பூமியில் நீதான் !
அந்திக் கவிதை அழகுதான்
-----அது உன்னிதழ் சிந்திய தேன்தமிழில்தான் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-May-19, 9:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே