என்னுடன் கவிதையாய்

பொதிகையில் பிறந்தாய் புலவன்பொய் யில்வளர்ந்தாய்
பூக்களில் தென்றலாய் புன்னகையில் அவளாய்
விழிஅசைவில் காதலாய் இதழ்ச்சிவப்பில் செந்தமிழாய்
என்னுடன் கவிதையாய் வாழும் தமிழே !

-----நிலைமண்டில ஆசிரியப்பா

பொதிகையில் நீபிறந்தாய் பொய்ப்புலவன் கைமொழியாய்
பூக்களில் தென்றலாய் புன்னகையி லேஅவளாய்
கண்ணசைவில் காதலாய் மெல்லிதழில் செந்தமிழாய்
என்னுடன் நீகவிதை யாய் !

-----இன்னிசை வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (10-May-19, 9:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 96

மேலே