தேனிலவு

நிலவின் மகளே
என் இதயம் பறிக்க வந்த
கவியழகே.... உன்னைப் பார்த்தால்
கல்லும் கவி பாடும்
காதலும் காதல் கொள்ளும்.....
மானின் கண்கள் கொண்டு
என்னை சாய்த்தாய் உனக்குள்....
பெண்ணே என்னை
கள்வன் என்று நினைத்தாயா...இல்லை
கேள்வன் என்று நினைத்தாயா!!!
கண் மூடி அருகில் வந்தாய்
உதடுகள்
மௌனம் பேசியது.....
காதலின் குரலில்____
நிமிடம் கரைந்திட
உயிர் உரைந்திட
காத்திருக்கிறேன்
உன் முத்தத்திற்கு...!!!
உன் கண்ணீர் சிந்த
----என் காதல் காரணமா.....!!!
இல்லை
உதட்டில் இட்ட முத்தம் காரணமா.....!!!
உதட்டின் வழியில்
உன் உயிர் எடுத்தேன்
என் உயிரில் சேர்க்க
கலந்துவிடு----
அன்பே
கைவிரல் கோர்த்து
கண்ணம் உரசிடு
மீண்டும் பிறந்திடுவேன்
உந்தன் மடியினில்.......
இரவே கண்மூடி விழித்திரு
அவள் இயாவி என்னை விட்டு பிரியும் வரை !!!
தேன்நிலவில் உன் தேகம் அருந்த
தேனீர் வேண்டும்------நான்
உன் தேகம் அருந்தாமல்......
அளிப்பாயா என்னை ஆட்கொண்டு......
உன் ஐவிரல் என் மார்பில் உறங்க
உன் இடை வலைவில் தலை சாயித்து உறங்குவேன்.....!!!
காதலே
அவள் எனதாகிவிட்டால்
என்
உயிர் சேர்ந்துவிட்டால்
இல்லாளாக----இல்லையேன்
கனவாகிவிடுவால்____
என் மூச்சின் இறுதியில்.....!!!!!

எழுதியவர் : கவிமாணவன் (12-May-19, 8:23 am)
சேர்த்தது : Kavimanavan
Tanglish : thenilavu
பார்வை : 63

மேலே