ஆறறிவு எதற்கு

கலையாத உறக்கத்தில்
​காணும் கனவுகள்
கலைந்திடும் விழித்ததும் ,
உதித்திடும் சூரியனால்
விலகிடும் இருளாக...

விசித்திரங்கள்​ ​​நிறைந்திருக்கும்
விறுவிறுப்​பும் ​​குறையாதிருக்கும்
அறி​ந்திடா ​முகங்க​ளும் ​
சென்றிடா​ இடங்க​ளும் ​
அரிதான நிகழ்வுக​ளும் ​
இடம்பெறும் சொப்பனத்தில்
இடம்பெயரும் நமதுடலும்...

எதிர்மறையா​ய் ​நட​க்குமென ​
எதிர்பாராதது நிக​ழுமென ​
கண்டதும் பலி​க்குமென ​
பரிகாரங்கள் செய்​திட்டால் ​
பாதகங்கள் ​நெருங்காதென
ஆரூட​மு​ம் கூறிடுவார்
​உழைக்காமல் பிழை​க்கும் ​
சோதிடரும்​ ​​போதிப்பார்
நல்வாழ்விற்கு வழியென ​...

படித்தவரே ஆனாலும்
பயத்தால் நடுங்​குவர்
விளைவை நினைத்து
விரக்தியும் கொள்வார் ​...
பகுத்தறியும் மானிடரோ
​​வீரியமுடன் விரட்டுவார்
புரட்டும் புளுகும்
கூறியே வாழும்
ஏமாற்று பேர்வழிகளை ...

​கனவுகள் யாவும்
மெய்ப் படுமானால்
கற்றிடும் கல்வியும்
சிந்திக்கும் சிந்தையும் ​
​அறிவும் ஆற்றலும்
உண்மையும் உழைப்பும்
தளரா தன்னம்பிக்கையும்
​எதிர்கொள்ளும் திறனும்
இயற்கையாய் கொண்ட
மனிதனே உனக்குத்தான்
ஆறறிவும் எதற்காக ?


​பழனி குமார்
27.05.2019​

எழுதியவர் : பழனி குமார் (27-May-19, 8:15 am)
பார்வை : 633

மேலே