நியதியின் நர்த்தனம்

நியதியின் நர்த்தனம்

கண்கள் சிந்தும் கருணை நீ எனக்கு
கண்ணீரடி நான் உனக்கு

மனதில் பொங்கும் பேரன்பு மழை நீ எனக்கு
பாச கிறுக்கலடி நான் உனக்கு

அறிவில் பொழியும் அருள் மழை நீ எனக்கு
மின்மினிப் பூச்சியடி நான் உனக்கு

உயிரின் தேடல் சக்தி நீ எனக்கு
சாயி பக்தியடி நான் உனக்கு

கர்ம வினைகள் யாவும் நீ எனக்கு
ஆன்மீக பித்தனடி நான் உனக்கு

ஞானமுற்ற போதினிலே பொங்கிவரும் இன்சுவையே !
காளி வடிவானவளே என் உணர்வே சாயி கிருஷ்ணா!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (7-Jun-19, 3:19 pm)
பார்வை : 67

மேலே