ஆசை
இழை உதிர் காலத்தில்
மரத்தின் நிழலில்
நிற்க ஆசை
பாலைவனத்தில்
பனிக்கட்டி மழையில்
நனைய ஆசை
அமாவாசை இரவில்
நிலா சோறு
உண்ண ஆசை
கடற்கரை மணலில்
அழியாத கவிதை
எழுத ஆசை
இரவில் பொழியும்
மழையில் வானவில்
பார்க்க ஆசை
நட்சத்திரங்கள் ஜொலிக்க
வான்மழை
பார்க்க ஆசை
பூமியில் மனிதர்களை
பார்க்க ஆசை