எள்ளுஞ்சொல் வெல்லுஞ்சொல்

சிறப்பான தம்பதியின்
விருப்பமான எண்ணத்தினால்
பிறப்பு அதைச் சிறப்பிக்க
உருவானது பிண்டம் ஒன்று கருவாய்

பிணியின்றி பிணக்கின்றி
பெரியதான நிகழ்வின்றி
அரிதான மனிதப் பிறப்பில்
அறிவானதாய் மழலை ஒன்று பிறக்க

அகில உலகின் நுட்பம் அறிந்து
அனைத்து துறையின் ஆற்றல் புரிந்து
அறிவில் சிறந்தோர் நட்புச் சூழ
சிறந்து செழித்து வளர்ந்து எழுந்தது

எள்ளுஞ்சொல்லும் வெல்லுஞ்சொல் அறிந்து
வேதனை நீக்கி சோதனைச் செய்ய
தோதான பாதை அறிந்து சாதிக்க துணிந்து
துணிவோடு செல்லுகையிலே

பாதை அதில் பாதிப்பை நுழைக்க
பாடுபடும் பாழான அரசியல்வாதிகளால்
பட்டபாடு அத்தனையும் சூடு கண்ட இலையாய்
துவண்டு சுருண்டு கருகும் நிலையை காணலாச்சு.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Jul-19, 10:52 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 44

மேலே