வள்ளுவன் வழியில் சிந்தித்தேன்

கூடா குடிநட்பு :

வாடாது என்றும் வளர்ந்திடும் நன்நட்பு
கூடாநட் போகுழிஆழ்த் தும் .

கூடாநட் பால்குடித்தான் பாடினான் ஆடினான்
ஆடாதோர் நாளடங்கி னான்

கூடாநட் பால்போதை யில்மரியா தைமறந்து
வாடாபோ டாஎன்ற னர்

மேடாஇல் லைபள்ள மாஎன் றறியாதான்
கூடாநட் பால்விழுந் தான்

ஏடால் எழுத்தாணி யால்உரைத்தான் வள்ளுவன்
கூடாநட் பின்பெருந் தீங்கு

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-19, 10:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே