மழையில் சில மகிழ்ச்சிகள்

தென்றலில் ஆடுது தேன்மலர் பூங்கிண்ணம்
வண்டுகளின் தேனிசைரா கம் .

முகில்களின் ஆட்டத்தில் மின்னலின் கீற்று
மழையிலாடும் பூந்தென்னங் கீற்று

மழைநீர்சொட் டுக்கள் இலைகளில் பூக்களில்
நெஞ்சில் கவிதையோ டை

குருவி குழிமழை நீரினில்நீ ராடி
சிலிர்த்துப் பறந்ததுவா னில்

நண்டு நகர்ந்து நகர்ந்து தனதுவளை
தேடுது வான்மழைச்சேற் றில்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Aug-19, 11:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 179

மேலே