வழிபாடுகள்

வழிபாடுகள்
================================================ருத்ரா

ஆமென்
என்று சொல்லிவிட்டு
எல்லோரும் போய்விட்டார்கள்.
வெறிச்சோடியது.
சுரூபங்கள்
சத்தமிடாமல் மனிதனின்
ரத்த சரித்திரங்களை
மௌனித்து சொற்பொழிவு ஆற்றியது.
மரப்பெஞ்சுகள் நீள நீளமாய்
கால் நீட்டிப் படுத்துக்கிடந்தன.
மனிதர்களின் நிழல்கள் அங்கே
தங்கியிருந்தன.
சோற்றுக்கவலைகளும்
பணத்தின் வேட்டைகளும்
அவர்களை வெளியே
மேய விட்டிருக்கின்றன.
அந்த பெரிய மணியின் ஓசை
அலையின்
ராட்சச நாக்குகளாய்
புல் மேய்ந்து கொண்டிருந்த
ஆட்டுக்குட்டிகளை
நக்கிக்கொடுத்தது.
கசாப்பு கத்திகளின் முனைகளில்
அடுத்த வழிபாடு
ஆரம்பிக்கும் வரை.

========================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (6-Aug-19, 1:48 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 66

மேலே