அந்த நொடி

வழி மீது விழிவைத்து

வெளிதனில் பார்வை
நிலைத்து

உன் வரவை துழவிய
கண்முன்னே

உருவங்கள் பல நிழலாட
ஏற்காத மனம்

கண்கொண்டு பார்க்காது

அமைதி இழந்து தடுமாற

அடையாளம் கண்ட உன்
அசைவை

கருவிழிகள் உள்வாங்க
அந்த நொடி

முகம் தானே முழுநிலவு
ஆனதடா..,

எழுதியவர் : நா.சேகர் (6-Aug-19, 4:46 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : antha nodi
பார்வை : 273

மேலே