உன் நினைவுகள்
உன் நினைவுகள் 😥😘
கடற்கரை மணல் பரப்பில்
உன் கால் தடம் தனை காண்கிறேன்
கரையோரம் விளையாடும் அலைகளில் உன் தாமரை பாதங்கள்
கடல் நீர் தனில் படுவதை
பார்க்கிறேன்
மாலையில் பூக்கும் மல்லிகை பூ வாசத்தில் உனக்கே உரிய வாசத்தை மணக்கின்றேன்.
வானவீதியில் எழிலாக உலா வரும்
முழு நிலவில்
உன் அழகிய முகம்
காண்கிறேன்.
நான் முகம் பார்க்கும் கண்ணாடியில் தலைவாறும்போது,
நான் தெரியவில்லை,
அதில் நீ தான் என்னை
பார்த்து சிரிக்கிறாய்.
உன் நினைவு என் நெஞ்சை விட்டு
என்றும் அகலாது
நீ இல்லாத வெற்றிடத்தை
உன் நினைவுகள் பூர்த்தி செய்கிறது
உன்னை என்றாவது ஒரே ஒரு நொடி நான் நினைக்கவில்லை என்றால்
அந்த நொடி
நானும் நீ சென்ற
அந்த இடத்திற்கு....
- பாலு.