விவசாயி
விடியும் முன் எழுந்தவன் வாழ்வில் விடியல் ஏனோ வரவில்லை?
வாழ வழி செய்தவன் வாழ்வில் ஏன் இத்தனை முற்படலம்?
சேற் நிலத்தில் தாற் ஊற்ற எண்ணுவதேன்?
விளை நிலம் விற்பனை பலகை ஏந்துவதேன்?
வானம் பாத்த அறிவினில் விஞ்ஞானம் மிஞ்சினான்..
தண்ணீரின்றி தன் கண்ணீரில் நீர் பாய்ச்சினான்.
எந்நாளும் தன் பயிர் வாடி கண்டதில்லை..
வாடும் தருவாயில் அவன் கண் விழிப்பதில்லை...