மெய்யோன்

மமதை மதியை மயக்கும் போது
மறையோன் மதிக்கு எட்டாது போக
மலையாய் மலைக்க வைக்கும் இடர்கள்
மனிதனை முட்ட முட்ட வந்து தாக்க
செருக்கு எனும் கொழுப்பும் கரைய
மங்கிய விழிகளுக்கு மெல்ல அவன்
ஒளி தெரிய அவன் அறியாது அவன்
வாய் திறந்து 'அவன்' நாமம் துதிக்க
மெய்யடியாருக்கும் எளிதில் புலனாகா
மெய்யோன் இவனுக்கு காட்சி தருகின்றான்
'அவன்' கருணா சமுத்திரம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Aug-19, 11:01 am)
பார்வை : 193

மேலே