இதுவா இதுவா
பலமுறை யோசித்தேன்
நினைவுக்கே வரவில்லை
எப்படி
என்னை நீ கவர்ந்தாய்
என்று
தொடரும் யோசிப்பின்
ஊடே சத்தமின்றி
உன்னால் நான்
கவரப்பட்டேன்
மொத்தமாக சுத்தமாக
இதுவா இதுவா என்று
கேட்கும் மனதிடம்
இதுவும்கூட என்று
அடக்கிவிட்டு
இன்னும் தேடுகிறேன்
கவர்ந்ததின் காரணத்தை
ஒவ்வொரு முறையும்
நீ என்னை கவர்வதால்