என் இசை அரசியே

என் தேவதையே !

உன் கண்கள்
கவி பாடுவதால் தானோ,

உன் இமைகள்
இமைத்து இமைத்து தாளம் போடுகிறது

உன் சுவாசம்,
குழலோசை ஊதுகிறது!

உன் கூந்தல் ,
நிறம் மாறாமல் நின்று விட்டது!

உன் வளையல்கள் ,
கைகளில் வீணை மீட்டுகிறது!

உன் உதடுகள் ,
வார்த்தைகளற்று , சிரித்து சமாளிக்கிறது!

உன் சிற்றிடை ,
அழகு நதியாய் வளைந்தாடுகிறது!

உன் காதோர தோடு,
கதகளி ஆடுகிறது!

உன் புருவங்கள் ,
வில்லுப்பாட்டு வாசிக்கிறது!

நீ இசையரசியாகி,
என் இதயத்தில்
இந்திரஜாலம் காட்டுகிறாய் சகலகலாவல்லியே !!!

எழுதியவர் : சங்கர் ராஜவேலு , அபுதாபி (12-Sep-19, 10:57 am)
சேர்த்தது : elitesankar
பார்வை : 84

மேலே