அரைக் கணவன்

அடேய்.....
அணிகலன்களை அருவருத்தவள்,
இன்று
அணிந்து கொண்டேன் வெட்கத்தை அணிகலனாய்...
சோதனைக் காலங்களில் மட்டுமே சுரந்த கண்ணீர்,
இன்று
சோகமே இன்றியும் சுரப்பதை கண்டேன்
மோதிரமாய் நீ மாறிய வேளையில்...
அட.... இது...
கனவிலும் காணாத காதலை உன்னிடத்தில்
நான் கண்டதாலா!!
இல்லை
என் அண்ணனும் தந்தையுமாய் நீ மாறிய காரணத்தாலா!!
எதுவாயினும் நேசிக்கிறேன் இந்நொடியை
😍நீ என் அரைக் கணவன் ஆகியதை😍

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (15-Sep-19, 12:08 pm)
Tanglish : araik kanavan
பார்வை : 322

மேலே