மௌனம் இதழ்களில் கலைந்த போது

முகில் வானில் கலைந்த போது
நிலவு எனும் கவிதை வந்தது
மௌனம் இதழ்களில் கலைந்த போது
புன்னகை எனும் கவிதை பிறந்தது
முகில் கலைந்து வந்த நிலவை
மௌனம் கலைந்து தவழ்ந்த புன்னகையை
ரசித்து நின்ற என்னில் தமிழ் எனும் கவிதை மலர்ந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Sep-19, 11:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

மேலே