தனிமையின் பிடியில்

மயக்கும் மாலை
கதவோரம் நீ!
உன் ஜாடை
மோகமாய் தைக்க…
கரங்களில் நீ!

விரதம் விட்ட நம்விரல்கள்
காதல்வீணை மீட்ட!
பசித்திருந்த இதழ்கள்
பசியாற…
தனித்திருந்த தேகம்
இணைசேர…
காதலின் சாரல்
அனலாய் உடலெங்கும்!
காதோரம் உன் சுவாசம்
உள்ளம் சிலிர்க்க…
விழி திறந்தேன்!

தனிமை கட்டில்…
பக்குவமாய் மடித்து
வைத்த உன் உடைகள்…
அறையெங்கும் அலங்கரிக்கும்
உன் கைவண்ணம்!
பார்த்து சிரிக்க…!
விழிகளில் நீர்கசிய…
உணர்ந்தேன்…
தனிமையின் பிடியில் நான்…!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (24-Sep-19, 6:03 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : thanimaiyin pidiyil
பார்வை : 3856

மேலே