அவள் அடங்கா ஓவியம்

கண் முன்னால் அவள்
ஒருக்களித்து நின்ற
வனப்பில் மயங்கிய ஓவியன்
தூரிகை எடுத்தான் காட்டாறு
வெள்ளம் போல் அவளில் கட்டற்றுக்
கொட்டிக் கிடக்கும்
அழகு முழுவதையும்
ஒற்றையாய் அடக்க முடியாது
மருண்டு கிடந்தது
அவன் ஓவியம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (25-Sep-19, 3:02 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 1780

மேலே