பொங்கும் கடலலையே

அலையே கடலலையே
ஏன் பொங்குகின்றாய் /
வான் மழையையும்
நீ வாங்குவதனாலோ ?
இல்லையெனில் தாங்கும்
பூமி ஏங்குவதனாலோ?

வங்கக்கடல் ஓடி
வாழ்வாதாரம் தேடும் /
ஏழை மீனவனின்
கண்ணீரையும்
சுவைப்பதனாலோ?

வெள்ளை நுரையை
அள்ளி வீசுகின்றாய்/
துள்ளி விளையாடும்
பிள்ளையையும்
அள்ளிச் செல்லுகின்றாய் /
கடல் மாதாவே
நீயும் தாய்யென்பதனாலோ?

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (11-Oct-19, 8:40 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 80

மேலே