யார்வரைந்தது
![](https://eluthu.com/images/loading.gif)
பலபேர் வியந்ததுண்டு
எங்களைப் பார்த்து
எங்களைப் படைத்தவனை
பாராட்டியோர்
அநேகம்பேர் உண்டு
எங்களையே வியப்பில்
ஆழ்த்திய
உலாவருகின்ற இந்த
ஓவியம்
யார்வரைந்தது என
வரைந்து வைத்த
ஓவியங்கள் வியந்துபோய்
நிற்கின்றன நளினமாக
நடமாடும்
அவளைப் பார்த்து