கூடிலாப் பறவைகள்

வீடெனும் கூடிலை ஒதுங்க இடமிலை
வீதியில் வாடியே வாழும் பறவைகள்,
மாடி வீடிலை மஞ்சமு மில்லை
மனதில் பயமது கொஞ்சமு மில்லை,
தேடி வந்து நகரத் தெருக்களில்
திறந்த வெளியில் குடும்பம் நடத்தும்
வாடிடும் வாழ்க்கை வந்தது மனிதனால்,
வருந்த வில்லையே படைத்த கடவுளே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Oct-19, 7:57 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 105

மேலே