செவப்பி - அத்தியாயம் 16

செவப்பி - அத்தியாயம் 16
======================

அடுத்தநாள் அந்த கிராமத்தில் நடந்த விஷயம் செவப்பிக்கே அதிர்ச்சி கொடுத்துடுச்சு..

பண்ணையாரு பொண்டாட்டி கற்பகம் விஷத்த குடிச்சு தற்கொலை முயற்சி பண்ணிக்கிட்டா.. எப்படியோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் முறையான சிகிச்சைய சரியான நேரத்துக்கு கொடுத்ததால, சாவோட விளிம்புக்கு போனவ பிழைச்சுக்கிட்டா..

பாவம் அவதான் என்ன பண்ணுவா? வாழ்க்கையே நிம்மதி இல்லாம போச்சு.. பயத்தோடவும், படபடப்போடவும் எப்பவுமே நிம்மதியில்லாம வாழ்றதுக்கு, போயிச்சேர்ரதே மேலுனு நினைச்சுட்டா போல..

கொஞ்சம் கொஞ்சமா மருந்தும், குளுக்கோசும் உள்ள போக, மெதுவா பழைய நிலைமைக்குத் திரும்பினா..
அவள பாதுகாப்பா கொண்டு வந்து வீட்ல விட்டுட்டாங்க, அவளோட சொந்தக்காரங்க..

அவ உயிருக்கு ஆபத்து ஏதுமில்லேனு தெரியவும், ஒவ்வொருத்தரா அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க..

இப்ப தனியா கண்ணீர் விட்டபடியே பெட்ல படுத்திருந்தா..

அப்ப ஒரு குரல் கேட்டுச்சு..

"கற்பகம்..."

"கற்பகம்..."

"ய.. யாரு..?"

"கற்பகம்.. நான் தான் செவப்பி..."

பதட்டமாகி, பெட்டிலிருந்து சட்டென எழுந்து நடுங்கியபடி உட்கார்ந்தாள் கற்பகம்..

"பயப்படாத கற்பகம்... உன் புருஷன் பண்ண பாவத்துக்கு, உனக்கு எதுக்குமா தண்டனை தரணும்.. சரி எனக்கு நடந்தது நடந்து போச்சு.. இனி என்னால திரும்பி உயிரோட வரமுடியாது. இன்னும் உன் புருஷன் மேல இருக்கிற என்னோட‌ கோபம் தீரல தான்.. ஆனாலும் உனக்காக.. நான் அவன பழி வாங்குற என்னோட வெறிய தணிச்சுக்கலாமுனு இருக்கேன்.. ஆனா.. திரும்பவும் அவன்.. எந்த பொண்ணுக்காவது ஏதாவது கெடுதல் பண்ணினதா தெரிஞ்சா, அடுத்த‌ நொடி அவனுக்கு ஆபத்து தான்.. சொல்லி வை.. இனிமே நான் அவனுக்கு எந்த தொந்தரவும் தரமாட்டேன்.. எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு.. நீ எதுக்கும் பயப்படாத..சரியா", எனச் சொல்லி முடிக்க...

பொல பொலவென்று உதிர்ந்த கண்ணீரோடு, கை கூப்பியவாறு நன்றி சொல்லி அமர்ந்திருந்தாள் கற்பகம்..

(தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (14-Oct-19, 5:47 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 124

மேலே