என்ன வேணும்

அழகென்று சொன்னேன் அவளை

என்னட வேணும் உனக்கு என்றாள்

வள்ளலோ என்று நினைத்தேன்

அடுத்து ஒன்றை கேட்டு வைத்தாள்

ஏதுமில்லாது கொடுத்துவிட்டேன்

மிச்சமில்லாது எடுத்தப்பின்னே

என்ன இருக்கு என்னிடம் புதுசாக

வார்த்தை ஜாலம் எதுக்கு உன்னிடம்

அசடுவழிய நான் நான் எதுவும்
எடுக்கவில்லை

சும்மா கொஞ்சம் தொட்டுக்
கொண்டேன்

மிச்சம் பிறகு என்று விட்டுப்போனேன்

சரி இப்ப என்ன வேணும் உனக்கு
என்றாள்

மீண்டும் உன்னை தொட்டுக் கொள்ள வேண்டும் என்றேன்

இப்போது அவள் வெக்கத்தில்

அடைக்கலமாகிப் போனேன் அவள் கக்கத்தில்

எழுதியவர் : நா.சேகர் (22-Oct-19, 2:34 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : yenna venum
பார்வை : 153

மேலே