காதல் விழி

நள்ளிரவில்
ஊர் உறங்க
வெண்ணிலா விழிக்கிறது...!

என் உள்ளமதில்
நீ உறங்க
நான் விழிக்கிறேன்...!

அதிகாலையில்
சேவல் கூவ
ஊர் விழிக்கிறது...!

அப்போதும்
நீ உறங்க
நான் விழிக்கிறேன்...!

கண்ணே!
எப்போதும்
நீ உறங்கு
நான் விழிக்கிறேன்...!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (29-Oct-19, 7:20 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : kaadhal vayili
பார்வை : 239

மேலே