விடுவிப்பாயா
கண்கள்தான் மூடிக் கொண்டனவே
பிறகு ஏன் கைகள் கொண்டும் மூடிக் கொள்கிறாய் முகத்தை
எண்ணங்கள் மூடிக் கொள்ளவில்லை நான் அறிவேன் பலவண்ணங்களில்
நீ என்னை அறிவதை
கன்னங்கள் சிவந்து போகிறதே
வெட்கத்தில் கோவையாய் அந்த
அழகை நான் ரசிக்கக்கூடாதா
சின்னங்கள் நான் பதிக்க காத்திருக்கின்றேன் கன்னங்களை உன் கைகளின் சிறையிலிருந்து விடுவிப்பாயா