தொடரும்

காற்று இதமாக வீசினாலும்

மொத்தமாக சாகாமல்

தவணையில் எரிகின்றேன்.

வலிகளென்று தெரிந்தாலும்

வாய்மூடி அழுகின்றேன்.

உனக்கு வலித்திடுமோ என பயந்து

முகமூடி அணிகின்றேன்.

விழித்திட்டால் உறங்காத

காதலைத் தான் சொல்கிறேன்.

துழித்துழியாய் இழக்கின்றேன்.

துயரமின்றி இறக்கின்றேன்.

காதல் சுலபத்தில் தெரியாத மயக்கம்

”நான் உன்னைக் காதலிக்கிறேன்”

என சொல்லத்தான் தயக்கம்.

உன் காதலாய் நான் இருக்கிறேன்

என தெரிந்தால் கூடப்போதும்

இனியும் தொடரும் என் இதய இயக்கம்.

எழுதியவர் : சுந்தரலிங்கம்.க (1-Aug-10, 10:21 am)
சேர்த்தது : சுந்தரலிஙம்.க
Tanglish : thodarum
பார்வை : 627

சிறந்த கவிதைகள்

மேலே