என் மனதில் அவன்
உன்னோடு வாழ்ந்த நாட்கள்
என் வாழ்வின் பொன்னான நாட்கள்
இன்று என்னை விட்டு எங்கோ காணாது
போய்விட்டாய் நீ ...... காரணம் கூட ஏதும் கூறாது
இனி உன் நினைவில் , அதிலே உனைக்கண்டு
அதுவே நீயாய் நினைத்து காலமெல்லாம்
வாழ்ந்திடுவேன் ....... என் மனதில் நீயன்றி
வேறொருவருக்கும் இடம் இல்லை என்பதை
எங்கோ இருக்கும் நீ எப்படியோ அறிந்தால்
அதுவே போதும் ..... அதுவே என் உயிர்மூச்சு