அவளுக்காக

தோட்டத்தின் ஓரத்தில்
ஓய்வு கொண்டிருந்த தென்றலும்
பிரஞை பெற்று மெல்ல வீச
உறங்கிக் கொண்டிருந்த மலர் மொட்டுகளும்
உணர்வு பெற்று இதழ்களை விரித்து எதிர்பார்த்திருக்க
காலை கதிரவன் வருகைக்காகவா ?
இல்லை இல்லை
கருங்கூந்தல் காற்றில் ஆட
கவிதைத் தமிழ்ப் பாடலை
தேனிதழில் இசை பாடி
காலை வரும் மாலை ஓவியம்
அவளுக்காக .....

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-19, 8:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : avalukkaka
பார்வை : 151

மேலே