வாடி நிற்கும் பூக்கள்

வாடிநிற்கும் பூக்களை கண்ட பொழுதெல்லாம்
வாடிநின்றேன் உன்நினை வில்

தேடித்தே டித்திரிகின் றேன்தேவி உன்னையே
பாடிப்பா டிப்பித்தா னேன்

வாட்டத்தை நீக்க விரைந்து வருவாயா
தோட்டத்தின் சோகத்தைப் பார்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-19, 11:09 am)
பார்வை : 87

மேலே