கடவுள் யார் சித்தர் யார்

கடவுள் யார்? சித்தர் யார் ?

ஆன்மா ஒன்றே பெரிய கடவுள்

தெய்வத்தில் ஆன்மா விடபெரிது ஐயனே
தெய்வமெது வென்றகத் யர்கேட்க -- ஐயன்
அறுமுகனும் இல்லை பெரியதான் மாவின்
இறுத்தார் அதுவே கடவுள் (பழனி ராஜன் )

ஆத்மாவுடன் சேர்ந்தே இருக்கும் உயிர் தத்துவங்களான சிவத்தின் தத்துவம் 36 சக்தித்
தத்துவம் 60 யும் நீக்கிட சீவனெனும் ஆத்மா சுத்தியாகி சித்தியாகி சித்தனாகி சிவம்
ஆகிறது. இதைத்தான் வள்ளுவனும் காமம் நீக்கிடக் கைநெல்லிக் கனியெனவேக் கடவுள்
நிற்பார் என்றார். யோகம் வேறு இல்லறம் வேறு என்றுணர்ந்து வள்ளுவன் குறளில்
இல்லறத்தர்க்கென காமத்துப்பாலைச் சேர்த்தான். ஆனால் மக்கள் இதைப் பிரித்துப்
பார்க்காது குழம்பிப் போய் விடுகிறார்கள்.

அந்த ஆரம்ப காலத்தில் அகத்தியருக்கு ஆறுமுகன் குருவாக இருந்து எல்லாவற்றையும் விளக்கியது பற்றி சுப்பிரமணியர் ஞானம் 200 மற்றும் 500 எனும் நூலில் கிடைக்கிறது. அதில் கடவுள் யார் மனிதன்யார் என்பதை மிக எளிய முறையில் புரிந்துகொள்ளும்படி விளக்கியுள்ளார். சில நூல்களில்இதையே வேறு விதமாகப் புரிந்துகொண்டு எழுதுகிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. சுப்பிரமணியர் ஞானம் 200 ல் கடவுள் காலைப் பாருங்கள் என்கிறார். திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்தில் 10 குறளில் 7 குறளில் பாதத்தை சேர் என்பதில் முக்கிய ரகசியம் உள்ளது.

"அண்டபரா பரமான பரையின் பாதம்
ஐயனெ ங்களாதி வஸ்து பதமும் போற்றி
தொண்டர்கள் மெய்ஞான ஞானியுட பதமும் போற்றி"

என்கிறார்

அகத்தியர் ( முதல் முனிவர், முதல் ரிஷி, முதல் சித்தர் ) ஆறுமுகனிடம் ஆத்துமாவைத் தவிர பரந்த உலகில் வேறு பெரிய தெய்வமுண்டோ என்று கேட்கிறார்.

நிற்கலா மென்றுசொன் னீரய்யா நிமலனுக்கு உபதேசம் நீரும் சொன்னீர்
எக்கலா மீராறு தலமுஞ் சொன்னீர் யிந்திரகிரி பர்வதத்திலேறச் சொன்னீர்
மிக்கலாம் ஆத்துமாவை என்றேயன்றி மேதினியில் தெய்வங்களுண்டோ சொல்வீர்
பக்குவமாய் ஞானமது பதியச் சொன்னீர் பரவெளியி லுண்மைதனை பகருவீரே (71)

அதற்கு ஆறுமுகனார் சொன்ன பதிலைக் கேளுங்கள்.

சொல்லுகிறேன் என்மகனே மாணாகேளு சூட்சமெல்லாம் அவனுடைய சூட்சமல்லால்
வெல்லுதற்கு வேருமொரு விதமு ங் காணோ வெட்டவெளி யென்றுநிசம் வெளியேமைந்தா
அல்லுகின்ற ஆன்மாவே ஒன்றே தெய்வம் அவனியிலே தெய்வமு ந்தானையாயில்லைத்
தள்ளுகிற கருவிகளை த் தள்ளினாக்காற் றானவனை தனக்குள்ளேயறியலாமே (72 )

அறியலாம் பூரணமே ஒன்றேதெய்வம் அபுரூபமான துவு மதுதானப்பா தெரியலா மும்மூலங் கொண்டால் மைந்தா தீவினைகள் நீங்கித் தெளி ந்துபோவாய்
அறியலாம் வழிபாதை யிதுதானப்பா வஸ்துவையுங் காணுதற்கு வகையிதாகும்
பரியெல்லாம் பரிபோகும் பாவம் போக்கும் பரகெதிக்குப் பாய் ந்துயினி யேரலாமே.(73)

"எல்லாம் பரமனுடைய சூட்சுமம் ஆகும். எல்லாம் சூனியம் என்கிற வெட்டவெளியே பரம்பொருளின் சூட்சுமமாகும். ஆன்மா ஒன்றே தெய்வமாகும். உலகத்தில் அதை விட்டால் வேறு தெய்வமில்லை. அந்த தெய்வம் நமக்குள்ளே இருக்கிறது. அதை யாரும் பார்க்க வேண்டுமென்றால் நமது ஆத்மாவில் பிரிக்க முடியாதபடி பின்னியுள்ள நம்மால் ஒதுக்கித் தள்ள முடியாத தீயவையும், கூடாத கருவிகளான சிவ தத்துவங்களான 36-யும் சக்தித் தத்துவங்கள் 60-யும் ஒதுக்கித் தள்ளினால் அவனுள்ளே அந்த தெய்வத்தை காணலாம் என்கிறார். மேலும் அந்த தெய்வம் குறை காண முடியாத பூரணமாக யிருக்கிறது. மேலே சொன்ன மொத்த 96 தத்துவங்களையும் ஒழிக்க வேண்டுமானால் மும்மூலத்தைக் (விந்தமுரி காயகற்பம்) கைக்கொண்டு பூரணமாகிய தெய்வம் என்கிற புனிதமான அபூர்வமான வஸ்துவை அடையலாம் என்கிறார்.

சித்தர்கள் யார்?

கோவில்களில் சந்துக்குச் சந்து காவி உடை அணிந்து உட்கார்ந்து பிச்சை வாங்கு பவர்களும், தெரு வீதிகளில் கிழிந்த அழுக்கு உடை போட்டு கண்களைச் சொருகிய படி சத்திரங்களில் கஞ்சா குழல் புகை இழுப்பவனெல்லம் சித்தர்களா? இல்லை. அவர்கள் மனிதர்கள் மத்தியில் உலாவுபவர்கள் கிடையாது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்கள் சிவ கணங்களில் ஒரு அங்கமாகும். சிவ கணங்கள் மொத்தம் 18.

1.அமரர்
2. சித்தர்
3.அசுரர்
4. தைதியர்
5.கருடர்
6. கின்னரர்
7. கிருதர்
8.கிம்புருடர்
9. கந்தர்வர்
10.இயக்கர்
11.விஞ்சையர்
12. பூதர்
13. பைசாசர்
14. அந்தரர்
15.முனிவர்
16.உரக்கர்
17.ஆகாசவாசிகள்,
18.போக பூமியராம்.

இனியாயாவது பிச்சைக்காரர்களையும், பைத்தியங்களையும்சித்தர்கள் என்றால் நம்பாதீர்கள்.


உலக இயக்கமே அஷ்ட கர்மம் என்று கண்டு பிடித்தவர்கள்தான் சித்தர்கள். அவைகள் முறையே ::

1. வசியம் (8 ) 2. மோகனம் (8) 3.தம்பனம் (8) 4. உச்சாடனம் (8) 5. ஆக்கிருஷணம் (8) 6.வித்துவேஷனம் (8) 7. பேதனம் (8) 8 . மாரணம்.(8 இந்த 8 x8 க்குள்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் ஆண் பெண்ணாக இருக்கலாம் நாய்க்கு பிஸ்கட் போடுவதாக இருக்கலாம், அதிகாரிகளுக்கு பரிசுகள் கொடுப்பதாக இருக்கலாம் ஐம்பூத வசியமாகலாம். ராஜ வசியமாக இருக்கலாம். ஆவிகள் வசியமாக இருக்கலாம். இப்படி சாதாரண வாழ்க்கையில் 8 வசியம் . மற்ற 7 லும் எட்டு எட்டு ஆக 64 கலையாக இயங்கி வருகிறது உண்மை. இதில் ஈடுபட மந்திரங்களும் சக்கரங்களும் சொன்னவர்கள் சித்தர்கள். முறையாக செய்தால் எல்லாம் நடைபெறும்.

அஷ்டமாசித்திகள் 1. அணிமா, 2.மகிமா, 3. கரிமா, 4.இலகிமா, 5. பிரார்த்தி, 6. பிரகாமியம், 7. ஈசத்துவம், 8. வசித்துவம். என்ற எட்டையும் செய்து காட்ட வல்லவர்களே சித்தர்கள். இந்த எட்டையும் பலரும் அறிந்திருப்பர் என்பதாலே விளக்கவில்லை.

திருமூலர் சொல்வதைக் கேளுங்கள்

சமாதி யுணர்ந்தக்கால் தக்க ரிஷி என்பார்
( பூமியாழத்தில் உட்கார்ந்து மூடி தியானத்தில் பலமாதங்கள் சமாதியிலிருந்து மீண்டும்
உயிரோடு வெளிவருதல். )

அமாதி குளிகையில் ஆடினால் சித்தனாம்
( 12 விதமான ரசக்குளிகைகள் செய்து மறைதல் பறத்தல் இன்னும் பல சாகசங்களைச்
செய்யத் தெரிந்தவர்கள்)

கமாதித்த வாசியைக் கண்டோர் சிவயோகி
( காய கற்பம் அறிந்து அதை செய்து உண்டபின் மூச்சுப் பயிற்சியினால் அமிர்தம் சாப்பிடடு
ஆயுளை நீட்டிப்பது. )

புமாதித்த மூன்றும் பொருளொத்த ஞானமே முடித்தக்கால் (திருமூலர் .கருக்கிடை 600-)
( மேலே சொன்ன மூன்று வழிகளை அறிந்தவனே ஞானி என்றழைக்கப்படுவார்களாம்.) )

உரோமரிஷி 100

உப்பல்லோ பிண்டத்தில் சேர்ந்தபோது உடலுயிரு மொன்றாகித் தண்ணீராச்சி அப்புவல்லோ முப்புவுக்காணி யாணி அதைவிட்டால் காட்டாது வழலை மார்கம் செப்பல்லோ பந்துக்குள் மூடலாச்சு தீட்சணமா யிந்த நூல் தெளிவோ மெத்த முப்பொருளும் ஒன்றாகி நின்ற சோதிமூலவட்டக் குருவருளால் மொழி ந்தேன் முற்று

சிவவிந்து உயிர்நீர் அப்பு என்பதாம் அந்த அப்பு என்கிற தண்ணீரில் விந்து உப்பு இருக்கிறது. அந்த விந்து நீர் பிண்ட உடல் என்கிற சக்தி நாதத்தில் ( சினை முட்டைகளில்) விந்து பாய்ந்து ரத்தமாக உருவெடுத்து கருத்தரித்தல் போல யோகத்திற்கும் வாதத்திற்கும் முக்கியமான கரு வழலை மார்கத்தை திறக்கமுடியாத பந்துபோன்று இறுக்கமானப் பாத்திரத்துள் மறை வாக வைத்து சித்தர்கள் மூடி யுள்ளார்கள். முப்பொருளான சக்தி சிவம் ஈசன் மூன்றும் ஒன்றாகி யிருக்கும் பரஞ்சோதிப் பொருளை குருவின் கருணையினால் நான் தெளிவாகச் சொல்கிறேன் என்கிறார

முனிகள் ரிஷிகள் சித்தர்கள் என்பது பதவிகள் போன்றதே . முதலில் சீடர்கள் தமது குருவிடம் 12 வருடங்கள் சீடராகஇருந்து அவர்கு சேவைகள் பலவழியிலும் புரிந்து, 25 துறைகளின் பாடங்களின் அடிப்படைகளை செய்முறையாய்த் தெரிந்து கொள்வார்கள். கூடவே சீடர்கு வேண்டிய அட்ட அங்கங்களாகிய இயமம் 11, நேமம் 10 ஆசனம் 10, பிரணாயாமம் 5, பிரத்த்யாகாரம் 6, தாரணை 6, தியானம் 10,சம்மதி 5 ப் பற்றிய விஷய ஞான ங் களைப் பெற்றிடுவர். பிறகு காய கற்பம் இன்னதென்று அறிந்து அதைத் தயாரித்து பலவாறான கடின பத்தியங்களிருந்து சாப்பிட்டுச் சாவுப் படுக்கையில் இருந்து மீண்டு எழுவார்கள். அப்போது நகங்கள், பற்கள், முடிகள் எல்லாம் விழுந்து மீண்டும்முளைத்துப் புத்துயிர் பெற்று யோகம் செய்யத் தயாராகுவார்கள். அவர்களுக்கு உண்மையில் இப்போதுதான் மூச்சுப் பயிர்ச்சி ஆரம்பம் செய்யத் தகுந்தகாலமாகும். கற்பம் சாப்பிடாமல் முச்சுப் பயிற்ச்சி செய்தால் குடலேரி செத்துப் போவாய் என்று திருவள்ளுவர் பஞ்சரெத்தினம் எனும் யோக நூலில் ரேசித்து இருகாலும் ஏற்றிப் பூரித்து இறுமாந்து கும்பிக்க குடலேறி செத்துப் போவார்ஆண்டே என்று சொல்லியுள்ளார்


கற்பம் சாப்பிடாமல் , நாசியின் இருபக்கமுள்ள இடகலை மற்றும் பிங்கலை என்ற மூச்சு நடக்கும் போது அது சுழுமுனை ஆகும்., அச்சுழுமுனையை உள்ளே ரேசித்துஅதை வெளிவிடாமல் உள்ளேயேக் கும்பித்தால் குடல் ஏறி செத்துப்போவார்கள் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார்.

சித்தாக வேண்டினாற் சேர்த்துண்ணு கற்பத்தை
வத்தான வாசியை வைத்துவைத்தே பாரு
கொத்தான வாசையும் கோவமும் விட்டிடு
யாவார்கள் மொருகோடி சித்தரே(திருமூலர் கருக்கிடை 600)

கற்பம் சாப்பிட்டப் பிறகு பின்னால் சொல்லப்பட இருக்கிற 25 துறை சார்ந்த தொழிலை செய்து எல்லாத் துறைகளிலும் சித்தியடைந்து( வெற்றி கண்ட பின் ) யோகத்தில் ஈடுபட்டு சமாதியில் இருந்து நீண்டநாள் மூச்சை அடக்கி சாதனைகள்புரிந்து வருடங்கள் கழித்து திரும்பி வருவது போன்ற அற்புதங்கள் நடத்தி ரிஷியாவார்கள். சிவ விந்து என்று சொல்லக்கூடிய பாதரசத்தை 335 உன்னத சரக்குகளுடன் முப்பூவைச் சேர்த்து 12 அபூர்வமான ரசக்குளிகைகளை செய்து சாகசம் செய்பவர்கள் சித்தர்கள்.

நமது நாட்டில் உருவானவர்களே சித்தர்கள். ஆனால் சித்தர்கள் யார் என்பதை இங்கு அறிந்தாரில்லை என்பதே உண்மை. கட்டுரை, கதைகள் எழுதுபவர் இலக்கியம் படித்தவர், இலக்கியம் பேசுபவர், அரசியல் பேச்சாளர்கள், நடிகர்கள் என்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் களெல்லாம் பக்தியைப்பற்றி பேசவிடலாம். சித்தர்களின் உண்மை அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் இந்தப் பிரபலமானவர்கள் தாங்கள் பார்த்ததைக் , கேள்விப்பட்டதை , பிறர் சொல்லத் தெரிந்தவை களையெல்லாம் ஆராயாமல் உண்மைபோல பேசுவதில் மிகவும் சாமார்த்திய சாலிகள். இவர்கள் சொல்லுவதை மக்களும் பாராட்டிப் புகழ்ந்து சந்தேகப்படாமல் ஏற்றுக்கொள்வார்கள்.

சித்தர்கள் எழுதிய ஆயிரக்கணக்கான புத்தகத்தில் ஒரு புத்தகத்தை ஏன் ஒரு வரிகூடப் படிக்காதவர்கள் எப்படி எந்த அடிப்படையில் சித்தர்களைப் பற்றி எழுதத் துணிகிறார்கள். பலரும் மற்ற வாசகர், ரசிகர்களை யெல்லாம் அவர்கள் எழுத்துக்களால் சித்தர்களைப்பற்றி அபத்தங்களைப் பேசியும் எழுதியும் மக்களை அவர்கள் பக்கமாய் இழுத்துச் சென்று அந்த அபத்தங்களை எல்லாம் நம்ப வைக்கிறார்கள். இன்று தமிழ் நாட்டில் இவர்களால் தான் நம் பண்டையக் கலாச்சாரங்கள் எல்லாம் தவறாகச் சொல்லி அழிக்கப்பட்டு விட்டது . அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் , இப்படிஇருக்கலாம், நான் ஊகிக்கிறேன், மற்றவர் கருத்து, ஆகியிருக்கலாம், என்று நினைக்கிறார்கள் என்றும் கட்டுரை முழுக்க எழுதுகிறார்கள். இப்படித்தான் தமிழர்கள் என்ற பெயரை வேறு பெயராக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சித்தர்களைப் பற்றித் தரமில்லாக் கட்டுரையை எழுதித் தள்ளிவிடுகிறார்கள்.

இவர்கள் தெருவில் நடமாடும் அரைப் பைத்தியங்கள் முக்கால், மற்றும் முழுப் பைத்தியங் களையும் இவர்களாகவே சித்தர்கள் என்று நினைத்து, பைத்தியங்களின் காலில் விழுவது, அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பது உடை கொடுப்பது எல்லாம் செய்து மற்றவரிடம் அவன் சித்தன் என்று அறிமுகப் படுத்துவது எதற்கு. ? அந்த பைத்தியம் ஒருபோதும் தான், ஒருசித்தன் என்று மற்றவரிடம் கூறியது கிடையாது. ஆனால் இப்படி கற்பனை செய்து கொள்பவரெல்லாம் அறுவருப்பான பைத்தியங்களையெல்லாம் சித்தரென்று மற்றவர்களுக்குத் தவறாக அடையாளம் காட்டி கொடுத்து இருக்கிறார்கள். சித்தர்களின் முதல் குறிக்கோள் யாருடனும் விதண்டா வாதம் செய்யக்கூடாது, பேசக்கூடாது என்பதே... யார் யாரிடம் அவர்கள் பழகக்கூடாது என்பதற்கு சித்தர்கள் ஒரு பட்டியலே போட்டு வைத்திருக்கிறார்கள். களவு கொலை செய்வோன், முன்கோபி, பொய்யன், தன் தாரம் தவிர பிறன்மனை நோக்குபவனையும் , கடவுளையும், தாய்த் தந்தைகளைக் கூசாமல் யேசுவோன், பெரியோரை நிந்தனை செய்வோனையும் ஒதுக்கித் தள்ளு என்கிறார்கள்.

எதை எதைத் தள்ளவேண்டும் என்ற பட்டியலையும் அகத்தியர் பரிபூரணம் 1200 ல்
சொல்வதைப்பாருங்கள்.

" தள்ளடா தாம்பூலம் மீனிறைச்சி சத்துருவாய் நின்றதெல்லாம் தள்ளவேணும்
அள்ளடா சொல்லுகிற புத்திகேளு அருமையுடன் (சாகா மூலி ) கற்பவகை உண்ணும்போது
கொள்ளடா பாலுடனே அமுதரசம் கொண்டுமன துரிமையினால் குருவைப் போற்றி
நில்லடா சுழினையென்ற கமல வீட்டில் நிரைஞ்சனமாய் நின்றதொரு தீபம்பாரே (பாடல் 246 )

தனையறியா மூடர் யார் என்பதை அகத்தியர் பரிபூரணம் 1200 ல் பாடல் 217 ல் காணலாம்

தன்னைத்தா னறியாத மூடர்தானும் சாத்திரத்தின் படியறிந்து தன்னைக் காத்து விண்ணைத்தா னோக்கும்வகை யறியமாட்டான். வேதாந்த பூரணத்தை விரும்பமாட்டான். கண்ணைக்கொண்டு காலறியாப் பாவிகளைக் கண்டாயானால் மனக் கண்ணைக் கொண்டு காலறியாப் பாவிகளைக் கண்டாயானால் கண்ணைத் தா மனக்கண்ணைக் கொண்டு மண்ணைத் தானள்ளியவன் வாயில் போட்டு மதிகதிரில் நின்றகுறி காட்டுவாயே

தள்ளுவது யாரை என்றால் மை ந்தா கேளு சக்திசிவம் அறியாரைத் தள்ளவேணும்
கள்ளுடனே மீனிறைச்சி அபி (ன்)அரக்கு கதிகெட்ட எண்ணெயொடு புளிதாம்பூலம்
மல்லுடனே கோபமொடு உறக்கஞ்சோம்பு மறுதாரந் தனைவிரும்பல் வஞ்சனை கள்கொடுமை
எள்ளளவு மனந்தனிலே நினையாமற்றான் ஏகாந்த பூரணத்தில் இருக்கநன்றே (பாடல் 921)

ஆகாத வழியுடையான் யார்?

(அகத்தியர் பரிபூரணம் 1200 பாடல் 1164)

சுகமான சுகமறிய மாட்டாமற்தான் தொல்லுலகில் மானிடர்கள் வேடம் பூண்டு
செகமாய்கை தனிலுள்ள பூசைசெய்து தீனியில் ஆசைவைத்து தின்பான் மட்டை
அகமான சுகமதனை யறியாமல்தான் அப்பனே வேர்தனைக்கும் காப்புக்கட்டி
பகவான் போல் தானிரு ந்துப் காண்ணைமூடி பார்க்கும்நிலை யறியாமல் பசப்புவானே

தேகம் இரு ந்தல்லோ சித்தெட்டும் ஆடலாம்
தேகம் இரு ந்தாக்காற் சேரலாம் பூரணம்
தேகம் இரு ந்தாக்காற் செயலெல்லாம் பார்க்கலாம்
தேகம் இரு ந்தாக்காற் சேரலாம் முக்தியே

கற்பம் ஏதென்று கசடரே எண்ணாதே
அற்பமுமல்ல வகண்ட மகா சக்தி
சொற்பமுமல்ல தொடுமுன் நவலோகம்
மற்படும் தங்க மாற்று பதினாறே

பதினாறு மாற்றுபோல் பாலனாமுன் தேகம்
விதினாலுலகை யோன் மெய் யெழுத்தைப் பொய்யா
மதினாற்மீசன் வகுத்த, முறைபாடு
கெதினாறவுண்டு கிட்டாய் சமாதியே ப


காயகற்பம் சாப்பிட்டு ஆயுளை நீட்டிக்கொண்டு ஆத்தாளையும் அப்பனையும் வணங்க மறந்து காய கற்ப மருந்தைக் கொண்டுத் ரசவாத முறையில் தங்கம் செய்ய முற்படும் பேராசைக் காரர்களைப் பற்றி திருமூலர் சொல்வதைப் பாருங்கள்

வணங்காமல் ஆத்தாளை வாதத்தை பார்ப்போர்கள்
பிணங்கான வர்கட்கு பேசாதே யின்நூலை
இணங்காத வரோடே யெய்தாது சித்தெல்லாம்
அணங்காள் நிருவாணி சண்ணுவாள் தப்பாதே.

பொன்னாக வேண்டினால் பூட்டுநீ லிங்கத்தை
பொன்னாக வேண்டினால் பூட்டதில் நாகத்தை
பொன்னாக வேண்டினால் பூட்டுநி மிளையைப்
பொன்னாக வேண்டினால் பூட்டுநீ துத்தமே

இந்த பொன் செய்யும் மருந்தை நீ சாப்பிட ஆயுள் நீளும் சக்தி சிவத்தை நோக்கி யோகம் செய்யவே சித்தர்கள் இம்மருந்தை காய கற்பமாகப் பயன் படுத்தினார்கள். அதேசமயம் அவர்க்கும் சீடர்களுக்கும் அன்றைக்கு வேண்டிய உணவுச் செலவிற்கு வேண்டிய தங்கம்அல்லது வெள்ளியைச் செய்து விற்றுக் கொள்ள விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மாபெரும் முனி சித்தர் அகத்தியரின் பிரதான சீடர்களில் புலஸ்தியரும் சுந்தரரும், தேவதத்தன் என்கிற தேரையரும் ஆவர். அப்போது மன்னருக்குத் தீராத தலை வலி கண்டு வைத்தியர் பலர் முயன்றும் சுகமாக்க முடியவில்லை. எல்லொரும் ஓர் குரலாய் அகத்தியர் வந்தால் சரி செய்வார் என்றனர். அகத்தியர் அரசரை சோதித்து அரசரின் கபாலத்தைப் பிளந்தார், உள்ளேத் தேரை. அதைக் கையால் எடுத்தால் மூளைக் கலங்கிவிடும். சிகிச்சை யும் சீக்கிரம் முடிக்க வேண்டும் . அப்பொது அருகிலிருந்த தேரையர் தண்ணீர் நிரம்பிய ஒரு வாயகண்ட பாத்திரத்தை தேரை அருகில் கொண்டுபோகவும் தேரை எகிறிப் பாத்திரத் திற்கு தாவியதாம். அன்றிலிருந்து தேவதத்தன் அகத்தியரால் தேரையர் என்றழைக்கப் பட்டார்.


அப்படிப்பட்டத் தேரையர் அவர் வாழ்ந்த இடத்தில் ஒரு மலையை அவருடைய சீடர்களை கொண்டு பல்லாயிரக்கனக்கான துருத்திகளை வைத்து அந்த மலையையே தங்கமாக்கும் சோதனையில் தகிக்கவிடாராம் . அங்கிருந்த முனிவர்களெல்லாம் அகத்தியரிடம் சென்று முறையிட்டார்களாம். தேரையர் அகத்தியர் சொல்படி துருத்திகளை நிறுத்தினார். பிறகு அதை மீண்டும் மீண்டும் தொடர்ந்தார். அகத்தியர் வேறு வழித் தெரியாமல் சீடனை மாரண மந்திரத்தால் மரணமடையச் செய்தாராம். ஆனால் தேரையரின் சீடர்கள் இப்படிப் பலமுறை உயிர் பெறச் செய்தார்களாம். அகத்தியரே தேரையரை வரவழைத்து ஏன் இப்படி கொடுமை செய்கிறாய் நீ இறந்துபோவது மேல் என்றாராம். தேரையர் தன் நிலையுணர்ந்து அவரின் பூத உடலை நீத்து ஆவியாகவே திரிந்து வாழ்ந்தாராம். இவைகள் கர்ண பரம்பரைச் செய்திகள்.

கல்லாகும் உன்தேகம் கரத்தால் மலைக்குத்திற்
சில்லாகும் தூளாகுஞ் சித்துமனேகம் பார்
வெல்லா இரும்பினை வேண்டும்போது உண்ணலாம்
வல்லான சித்தரே வச்சிரதேகமே

சித்தர்கள் கற்பம் சாப்பிட்டதால் கல்லைப்போன்ற உறுதியான உடல் படைத்தவர்கள் . சித்துகள் அனேகம் செய்வார்கள் அவர்கள் நினைத்தால் மலையைக் கையால் குத்த பாறைகள் சில்லாகித் தூளாகுமாம். யாரையும் வெல்லும் இரும்பையும் பஸ்மம் செய்து உண்பவர்கள் எச்சில் உமிழும் நேரத்தில் ஒரு கண்டம் விட்டு மறு கண்டம் பறப்பராம். உதாரணத்திற்கு போகர் தினமும் பொதிகைக்கு வந்து மாலையில் வெள்ளை மாந்தர் வசிக்கும் சீனதேசம் பற ந்து போவாராம். போகர் எழுதிய சப்த காண்டம் 7000 படித்தால் பல அதிசயங்களைத் தெரிந்துகொள்ளலாம். மற்றவர்கள் சொல்வது போல கண்களை மேலே சொருகி அழுக்குடுத்தி பிச்சையில் தின்பவன் சந்தேகமில்லாமல் அசல் பைத்தியம். சித்தர்களைப் பார்க்க தவம் செய்யவெண்டும். ஈனப் பிறவிகள் சித்தர்களை காண முடியாது.

உலகைப் படைத்த போதே கடவுள் சப்த (7) ரிஷிகளைப் படைத்தார் என்று புராணங்கள் சொல்கிறது. அவர்கள் முறையே::

1.அகத்தியர் 2.அத்திரி 3. பரத்வாஜ் 4. கௌதமர் 5. ஜமதக்னி 6. வசிஸ்டர் 7. விஸ்வாமித்ரர்.

இந்த ஏழு ரிஷிகளின் பெயரை உச்சரிக்கும் மந்திரம் அபிவாதமந்திரம் . அபிவாத மந்திரம் ஒருவர்க்கொருவர் சொல்லப் பூ நூலை வெளியில் எடுத்துக் காட்டி தான் எந்த ரிஷியின் கோத்திரமோ அந்த ரிஷியின் பெயரை கடைசியாகச் சொல்லி தான் இன்னரின் குமாரன் நான் என்று தகப்பனார் பெயருடன் தன்னுடைய பெயரைச் கடைசியில் சொல்லும் வழக்கம் இன்றும் அந்தணரிடையில் இருந்து வருகிறது உண்மை. இந்த ஏழு ரிஷிகளின் நட்ஷத்திரக் கூட்டத்தை சப்த ரிஷி மண்டலம் என்பர். இந்துக்களின் திருமணத்தின் போது அம்மி மிதித்து அருந்துதி நட்ஷத்திரம் காட்டும்போது அடுத்ததாக சப்த ரிஷிகள் மண்டலத்தையும் காட்டுவார்கள். கோத்திரங்கள் ஆயிரமானாலும்அவைகள் இந்த 7 மூலகோத்திரங் களிலிருந்து பிரிந்தவையே. இந்த பூமியில் வாழும் மானுடர்கள் இந்த 7 ரிஷிகளின் வம்சாவளிகள் என்றே கருதப்படுகிறது.


முனிகள் மொத்தமும் 31 கீழ் வருமாறு.

1. அகத்தியன் 2.அத்திரி 3.ஆங்கிரசன் 4.இரணியன்மாமுனி 5.உரோசமாமுனி 6. .ஏரண்டமுனி 7. கலைக்கோட்டுமுனி 8 .காசிபன் 9. கௌதமன் 10. .சத்த கூன்முனி 11 .சச்சிதான ந்தன்12 சமனதக்னிமுனி 13 .சனகன் 14. சனக் குமாரன் 15 .சுகன் 16 , ததி மகா முனி 17..துருவாசன்.18 .நாரதன் 19.பதஞ்சலி. 20 .பரத்துவாசன் 21 .பராசரன் 22 . பற்பமாமுனி 23 . பிருகுமுனி 24 . பினாகிமாமுனி 25 .புலஸ்தியன் 26 .மார்கண்டன் 27 ,வசிஷ்டன் 28. வால்மீகி 29. விசுவாமித்திரன் 30 .வியாக்கிரபாகன் 31 வியாச மாமுனி

ஆகியோர் ஆவர்.

ஆனால் திரு மூலர் மாபெரும் சித்தர் அறிவோம் . ஆனால் அவருடைய பெயர் ரிஷிகள் , மற்றும் முனிவர்களின் பாட்டியலில் ஏனோக் காணப்படவில்லை.


தேகம் இரு ந்தல்லோ சித்தெட்டும் ஆடலாம்
தேகம் இரு ந்தாக்காற் சேரலாம் பூரணம்
தேகம் இரு ந்தாக்காற் செயலெல்லாம் பார்க்கலாம்
தேகம் இரு ந்தாக்காற் சேரலாம் முக்தியே


சித்தர்களின் வழிமுறைகள் ஒழிந்தது எப்படி ?

இந்த தத்துவங்களை எள்ளளவும் புரிந்துகொள்ளாத மனிதர்கள் அதை பக்தி மார்கத்தில் நுழைத்து வடக்கில் புத்தம் ஜைனன் என்று பிரித்தார்கள் . அது தெற்கிலும் சிலகாலம் பரவியது. தெற்கில் 1.அத்வைதம் , 2.துவைதம் 3.வசிஷ்டாத்வைதம் என்று குழப்பி மக்களை கடவுள் இல்லை என்று சொல்லு மளவுக்குத் தள்ளிவிட்டார்கள். அதுவும் சரிதான் விந்தமுரி காய கற்பத்தை யார் கண்டு கொள்ள முடியும். காய கற்பத்தை அந்த ஆதி சங்கரனும் , மத்துவரும் ராமானுஜரும் கொஞ்சமாவது அறிந்திருந்தார்களா இல்லையா? என்பது யாருக்கும் இதுவரைத் தெரியாது... ஆனால் ஒருவர் கடவுளின் ஆத்மவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்றார். அடுத்தவர் அப்படியல்ல அல்ல அந்த இரண்டும் வெவ்வேறு என்று வாதிட்டார். கடைசியானவர் ஜீவன் அஜீவன் ஈஸ்வரன் மூன்றையும் மற்றும் பக்தி, சரணாகதிமோட்சம் என்று அக்குவேறு ஆணிவேராக பிரித்து சித்தர்களின் உண்மை வழி முறைகளை ஒழித்துவிட்டார்கள் என்பதைத் தவிர்த்து வேறு எதையும் நாம் சொல்வதற்க்கில்லை.

தற்சமயம் மக்களில் சிலர் எதையும் ஆராய நேரத்தையோ நாட்களையோ ஆண்டுகளையோ செலவழிக்காமல் சகட்டு மேனிக்கு தன்னுடைய ஊகத்தையெல்லம் கூட்டி முடிவேடுத்து அந்த பொய்யை மக்களிடம் அவசர அவசரமாக பரப்பி அவர்களின் பக்தியை அழித்து வருகிறார்கள். திருமூலர் சொல்கிறார் நான் யுகம் யுகங்களாக சாரம் என்கிற சிவ உப்பின் சோதனை களை பல வாறாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். ஆனால் அது இன்னும் நீண்டுகொண்டே போகிறது அதுமுடிந்த பாடில்லை என்கிறார். யுகயுகமாக ஆராய்ச்சி என்றால் அவருடைய உண்மையான வயதுதான் என்ன ? சித்தர்கள் யாரும் தாங்கள் எப்போது பிறந்தோம் என்று வெளியிட்டதில்லை . உலகத்தின் முதல் ரிஷி , முதல் முனி முதல் சித்தர் என்றால் அது அகத்தியப் பெருமானே. ரிஷிகளின் முனிவர்களின் சித்தர்களின் வயதை நாம் வரையறுக்க எதற்காக முயல வேண்டும். ரிஷிகள் முனிவர்கள் சித்தர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை படிக்க ஆரம்பியுங்கள். அப்படிப் படிப்பவன்தான் உண்மைத்தமிழன். அவன் அந்த நூற்றாண்டு இவன் இந்த நூற்றாண்டு, எதற்கு இந்த தேவையில்லாத விஷய ஞானம். இதை எவன் வேண்டுமானாலும் கண்டு சொல்லலாம். அந்த ஆராய்ச்சி செய்யும் நேரம் சித்தர் என்ன சொல்கிறார் என்று புத்தகத்தைப் புரட்டுங்கள், தெளியுங்கள். நுனிப் புல் மேயாதீர்கள். திருவள்ளுவர் அகத்தியரைத் தன் ஆசான் என்கிறார். அவர் அப்படிக் கூறுவதிலிருந்து திருவள்ளுவரின் வயது மற்றும் எப்போது பிறந்தார் என்பதை யாரும் வரையறுத்துக் கூறமுடியாது.

திருவள்ளுவர் திருக்குறளில் காமத்துப் பாலை உலகோர்க்காக எழுதினேன் என்கிறார். யோகிகளுக்காக எழுதிய முப்பு சூஸ்திரத்தில் "நாம்தான் காமனை ஒழித்துப் போடிற் கை நெல்லிக்கனியெனவேக் கடவுள் நிற்பார்." என்கிறார். ஆகவே இல்லறத்தில் அதிலும் காம விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர் கடவுளைக் காண முடியாதென்று தானே சொல்கிறார். மேலும் திருவள்ளுவர் யோகிக்களுக்காக எழுதிய நூல்கள் கீழ் வருமாறு.

திருவள்ளுவர் ஞான வெட்டியான் 1. நவரெத்தின வைத்ய சிந்தாமணி 2. பஞ்சரெத்தினம் 3 கற்பங்கள் 4. வாதசூஸ்திரங்கள் 5 முப்பு சூஸ்த்திரம் 6. வாதம் 7. ஏணி ஏற்றம் 8.முப்பு குரு 9. நாதா ந்தத் திறவு கோல் 10. கெவுன மணி 11 வைத்ய சூஸ்திரம் 12. வள்ளுவர் ஜோதிடம் 13 மட்டுமே கிடைக்கிறது. மற்ற நூல்கள் கிடைக்க வில்லை. யோகிகளுக்காக பலவாறான நூல்களை எழுதிய திருவள்ளுவரின் பெயர் ரிஷி, முனிவர், சித்தர் ஆகிய எந்தப் பட்டியலிலும் இடம் பெறவில்லை . இது ஏன் என்று பெருத்த யோசனையாக இருக்கிறது. பிறகு இ ந்த யோசனை நமக்கு தேவயில்லை சித்தர்கள் சொன்னக் கருத்துக்களே நாம் ஆய்வுக்கு எடுக்கவேண்டியதை உணர்ந்தேன். காரணம் அவர்கள் யார் முந்தையவர் யார் பிந்தியவர் என்பதை நாம் கணக்கிட முடியாது அது தேவையற்றதுமாகும்.


சித்து முனிகளில் மூத்தவரான அகத்தியர் ஒரு பாடலில் சித்தர்கள் ஒன்பது என்றும் பின்னர் அது பதிணென்மர் ஆகியது என்று சொல்லுகிறார். சித்தர்கள் முதலில் முறையே அவர்கள் 1.சத்திய நாதர். 2.சதோக நாதர் 3. ஆதி நாதர்.4. அநாதி நாதர். 5. வகுளி நாதர். 6.மதங்கநாதர். 7. மச்சேந்திர நாதர். 8. கடேந்திர நாதர் . 9.கோரக்க நாதர் ஆவர்.

இந்த ஒன்பது பேரில் மச்சேந்திரர் கோரக்கர் தவிர மற்ற எழுவர் பெயர் நீக்கப்பட்டு பதிணென் மகா சித்தர் எனும் நீண்டப் பட்டியல் உள்ளது.

1.நந்தீசர் 2.மச்சமுனி 3. சட்டைமுனி 4. அகப்பைமுனி 5. பாம்பாட்டி 6 .இடைக்காடர் 7. அழுங் கண்ணி 8. குதம்பை முனி 9. தன்வந்திரி 10. வால்மீகி 11. ராமத்தேவர் 12. கொங்கணர் 13. கருவூரார் 14. சுந்தரர் 15 . திருமூலர் 16 . போகர் 17 . அகத்தியர் 18. கோரக்கர். என்பவராம் .

சில நூல்களில் பாம்பாட்டி, குதம்பை முனி , தன் வந்திரி என்பதற்கு பதிலாக தேரையர், புலஸ்தியர், ரோமரிஷி என்பது போல பெயர்கள் மாறியிருக்கும். சாதாரணமாக சித்தர்கள் நவ கோடி பேர்கள் என்கிறார்கள்.

பழனியில் தண்டபாணிக்கு சிலை வைத்தவர் போகர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். போகர் பழனியில் நவ பாஷாண சிலையை கந்த வேளுக்கு செய்தார் என்றும் சொல்கிறார்கள். அதில் போகரின் பெருமைபெரிதும் மறைக்கப்பட்டுள்ளது. நவ பாஷாணத்தில் மட்டும் சிலை செய்ய முடியுமா? முடியாது, காரணம் சிலை செய்யக் கல் அல்லது உலோகம் வேண்டுமல்லவா? இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் போகர் வேலனின் சிலையை எப்படி செய்தாரென்று.

கடவுளானவர் உலகத்தில் பல உயிரினங்கள் 1. மனிதர், 2 தேவர், 3மிருகம் 4 நீர் வாழ்வன 5 ஊர்வன 6 பறப்பன 7 தாவரங்கள் மற்றும் ஜடப் பொருள்களனைத்தையும் படை த்துள்ளார். இவற்றுள் அடங்குபவைதான் 1.)நவ உலோகங்கள் 2). நவரெத்தினங்கள் 3. நவ பாஷாணங்கள்4 ) 32 வகை இயற்கை பாஷாணங்கள். 5) 32 பறங்கிவைப்பு பாஷாணங்கள். 6) 12 காரங்கள்7) 13 சாரங்)கள் 8. உலகிலுள்ள அனைத்து உயிர் மற்றும் ஜடப் பொருள்களின் உப ரசங்கள் 216 ம் 9. கந்தகம் 10. பூநீறு 11. முப்பு குரு ஆகியப் அனைத்துப் பொருள்களின் சத்துக்களை நவலோகங்களுக்கு சிவவிந்தாம் ரசம் என்னும் உலோகத்திற்கு மேலே சொன்ன 335 சரக்கினை புடத்தில் வைத்து ஊட்ட ஊட்ட அதற்கு மிகுந்த பசி வேட்கை உண்டாகி எல்லா சத்தையும் உரிஞ் சும்.
அப்படி சரக்கெல்லாம் புடம் போட குகை ஒன்று செய்ய வேண்டும் . அந்த குகைக்குள் பூச ஒரு புட மருந்து செய்ய வேண்டும். இந்த மருந்தின் பெயர்தான் புட ராஜன். இதற்கு கந்தகம் மனோசிலை, பூனாகம் நிமிளை மற்றும் காந்தம் கஞ்சா விதைத் தயிலத்தில் மாதவிடாய் ரோமனீர் சேர்த்து அரைத்து புடம் போடும் குகையில் பூசி புடம்போட ரசம் எல்லாசரக்கின் சத்தையும் உரிஞ்சும். மாதவிடாய் ரோமனீர் என்பது சங்கேதப் பெயர்களாகும். இதற்குப்பிறகு ரசம் எனும் சூதம் எல்ல சரக்கின் சத்துக்களையும் குடிக்க ஒரு மருந்தையும் குடித்த சத்தைக் கழற்ற ஒரு மருந்தையும் செய்ய வேண்டும். அதன்பெயர் குடோரி. உரிஞ்சும் மருந்து கிரவணம் என்ற மருந்தாகும்.


இதை நவீன விஞ்சானம் இன்னும் அறியாது என்பதே உண்மை. முதலில் கிரவணம் குடோரி என்னும் மருந்துகள் மூலமாக ரசத்திற்கு சத்துக்களை ஏற்றிப் பின் கழற்றி கந்தவேள் சிலையை போகர் வடித்துள்ளார். உலகத்தில் உள்ள அத்தனை உயிர்கள் மற்றும் ஜடப் பொருள்களின் சத்துக்கள் அச்சிலையில் இருப்பதால் தான் கந்தவேளின் சிலை பரம்பொருளுக்கு இணையாகக் கருதப்படுகிறது. ஆகவேதான் அதன் தீர்த்தம் பட்டவுடன் எல்லா நோயும் குறைகளும் தீர்க்கப்படுகிறது. இந்தகால விஞ்ஞானி நிலாவுக்கு ராக்கெட் விடலாம் ஆனால் இதைப் போல ஒரு சக்தி வாய்ந்த சிலை வார்க்க முடியுமா? இப்படிப்பட்ட போகரின் குரு காளாங்கி நாத ஐய்யராம். இவரின் பெயரைக் கூட ரிஷிகள் முனிகள் சித்தர்களின் பெயர் பட்டியலில் காண முடியவில்லை. அது ஏன் என்பதை யார் சொல்லியும் அறியமுடியவில்லை. மூத்த சித்தர்களான அகத்தியர் திருமூலர் போன்றவர் மற்ற சித்தர்களை தமது நூல்களில் குறிப்பிடும்போது அவன் இவன் என்றே குறிப்பிடும் வழக்கம் உள்ளதைதான் காண முடிகிறது. ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் பத்தினிகள் இருப்பதைப் போலவே சித்தர்களுக்கும் மனைவி மக்கள் இருந்துள்ளார்கள். அவர்களுக்குள் ஜாதிகளும் பேசப்படுவதை சில பாடல்களால் அறிய முடிகிறது.

சித்தர்களின் குறிக்கோள்கள்::

அவர்கள் நாத விந்துக்களைப் பற்றி முக்கியமாக பேசுவார்கள். மனிதர்கள் மூச்சுக் கலைப் பயிற்சியால் நீண்ட நாள் வாழ்ந்து கடவுளைக் காண வேண்டும் தானே சிவனைப்போல சக்தி பெறவேண்டும் என்பதே நோக்கமாகும். நீண்டநாள் வாழ உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும . அதற்கு மனிதன் தன்னுடைய விந்தை செலவழிக்காமல் பாதுகாக்க வேண்டும். பிறகு காய கற்பம் செய்து சாப்பிட்டு உடலை அழியாமல் பாதுகாக்க வேண்டும். அதன் பிறகு யோகம் செய்ய விந்து மூலாதாரத்திலிருந்து முதுகு ரந்திரமாக ஏறிக் கபால வழியாக அமிர்தமாக மாறி தொண்டையில் விழும். அதை சாபிட்டு வர சாவு என்பதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கும். சித்தி என்றால் வெற்றி என்பதை நாம் அனைவரும் அறிவோம் . இந்த சித்தர்கள் எதில் வெற்றி கண்டார்கள். இருபத்தி ஐந்து (25) பாடத் துறைகளில் கற்றுத் தேர் ந்து வெற்றி பெற்றவர்கள்.

1.சக்தி தீட்சை சித்தி, 2. சிவ தீட்சை சித்தி, 3. வேதாந்த சித்தி,4. சித்தாந்த சித்தி,5 மந்திர சித்தி 6. மௌன சித்தி 7. காய சித்தி 8. எட்டு எழுத்து சித்தி 9. ஐந்து எழுத்து சித்தி 10. ஆதார சித்தி11.பிரசாத சித்தி, 12. ஆன்ம சித்தி, 13. தத்துவ சித்தி 14 . சொரூப சித்தி 15.தத்வப் பிரசாத சித்தி,16. வரப் பிரசாத சித்தி, 17. வாத சித்தி, 18. சாம்பவத்தின் சித்தி, 19. போத சித்தி,20. கால சித்தி,22. ஞான சித்தி, 23.யோக சித்தி 24. மற்றும் 25. ஆராதார சித்தியாம்.


இந்த அண்ட சராச்சரத்தில் இதற்கு மிஞ்சிய கல்வி விஞ்சானங்கள் இல்லை இனிமேலும் வரப் போவதில்லை. சோதனை செய்து பாருங்கள். உலகில் இந்த 25 துறையிலும் கற்றுத்தேர்ந்த பேரறிஞனோ மேதையோ இருந்தால் காட்டுங்கள். இதை விடுங்கள் ஒவ்வொரு துறையும் எதைப்பற்றி சொல்லுகிறது என்பதையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் . சொல்லமாட்டார். உதாரணத்திற்கு தற்சமயம் ராக்கெட் யுகமாக இருக்கிறது. E=MC2 என்பதுதான் ஐன்ஸ்டீன் தியரி. அதையும் தவறென்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த எக்ஸ்பெரிமெண்ட் கால்குலேஷன் எல்லாம் இங்குக் கிடையாது. தற்கால விஞ்சான செய்முறை யெல்லாம் இங்கு எடுபடாது. சித்தன் போக்கு சிவன் போக்கு அதை எவனும் கண்டுபிடிக்க முடியாது. 10 வதாக சொல்லப் படிகின்ற ஆதார சித்தி என்ற சித்தர் கல்வியில் தேர்ந்திருந்த சித்தனென்றால் மட்டுமே கண்டுகொள்ளலாம். இதற்கு ராக்கெட்டோ ராக்கெட் தளமோ வேண்டுவதில்லை. திரு மூலர் கருக்கிடை 600 என்னும் சுவடி வாயினில் ஒன்று இடுப்பினில் ஒன்று ரசக் குளிகை வைத்துக்கொண்டு 160 வது அண்டம் வரை (சித்தர்கள் வசிக்கும் அண்டம்) பறந்தேன் என்கிறார். வழியில் ஒரு முனிவர் வந்து அவருடைய இரு ரச குளிகையில் ஒரு குளிகையை வாங்கிக் கொண்டு சோதிக்கிறேன் என்று பறந்து போனாராம். வெகுநேரம் ஆகியும் வராதது கண்டு மூலர் அவர்மேல் ஐயமுற்றாராம். கொஞ்ச நேரத்தில் அந்த முனிவர் வந்து குளிகையைத் திருப்பிக் கொடுத்து . திருமூலர் குளிகையில் தஙகச் சத்து குறைவாக உள்ளது அதனால் பறக்கும் வேகம் குறைவாக உள்ளது என்று சொன்னாராம். ஆகத் தங்கச்சத்து குறைவு வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று குளிகைக்கு தங்கச்சத்தை தி ருமூலர் குடிக்கக்கொடுத்தாராம். ஆக நவீன விஞ்சானம் வேறு சித்தர்கள் விஞ்சானம் வேறு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

7 வதாகச் சொல்லப் பட்ட காய சித்தி என்பது காயத்திற்கு (தேகம் என்ற உடல் ) நோய்வந்து அழியாமல் சிதையாமல் காத்துக் கொள்ளப் படிக்கும், காய கற்பங்கள் . சித்த மருத்துவங் கள் பற்றிய படிப்பை கற்கும் துறையாகும்.`நெடு நாளிருந்து கடவுளைத் தரிசிக்கலாம். கடைசியில் நீயும் சிவனாகலாம் என்கிறார்கள். "தானான காயத்தை நிறுத்த வேண்டும் . சதா காலம் சுக்கிலத்தை கட்ட வேண்டும் " என்கிறார் போகர் தன்னுடைய நூலான போகர் 7000 2 ம் காண்டம் 771 ல். "தேகமுரும் விந்து கழன்றால் தேகம் போச்சே 2 அகத்தியர் கர்மகாண்டம் 300" ." அறைகிறேன் விந்தழிந்தா மேகமாச்சு. அகத்தியர் வைத்திய வல்லாதி 600ல்


யோகமும் ரசவாதமும் செய்ய நினைப்பவர்கள் விந்து எனும் பொருளைவிட்டுவிட்டு மற்ற பொருளானநாதத்தை மட்டும் கண்டெடுத்து என்னபிரயோஜனம் விந்துவைக்கண்டு பிடிக்க வேண்டும்என்கிறார்கள்.

விந்துவை விட்டு வேறு எதையோ விந்துவென நோக்கி நொந்துகெட்டாய் பஞ்சரெத்தினம் 500


காய கற்பத்தின் முக்கிய வேதிப்பொருள்கள்

1. ஆகாய விந்துப்பு (ஈசனுப்பு. ) அண்டம் தலை "ய"
2. நீருப்பு என்கிற கடலுப்பு (சிவ உப்பு ) நெறுப்பு "சி"
3. பூமி சூலினுப்பு (சக்தி உப்பு ) கால் எனும் நில உப்பு :" ந "

இதுவே கால் தலை என்பர் அயனும் மாலும் தேடியது இதையே

(தொடரும்)

எழுதியவர் : பழனி ரஜன் (14-Dec-19, 9:54 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 804

மேலே