தள்ளிப்படும் என்றாள் தர்மபத்தினி

தும்மினேன், யாரை நினைத்துநீர் தும்மினீர்!
விம்மியே ஊடினாள் என்னுயிர்க் காதலி.
திருமணம் முடிந்தது, சிலவருடம் சென்றது;
ஒருநாள் அடக்க முடியாமல் தும்மினேன்! 1

ஏன்தும்மி தூக்கத்தைக் கெடுத்தீர் நீர்பாவி!
என்றாள் மனைவியான என்முன்னாள் காதலி.
ஜலதோஷம் என்றேன்; தள்ளிப்ப டுமென்றாள்
பலமாக மனைவி என்றதர்ம பத்தினி! 2

வழுத்தினாள் தும்மினே னாக, அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. 1317 புலவி நுணுக்கம்

கருத்துரை: காளியப்பன் எசேக்கியல் • 16-Jul-2015 10:17 am

யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்? என்பதுவே திருக்குறளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரை.

இதையே ஆண்டு பலவானபின் காதலி மனையானபின் எப்படி என்ற கற்பனையை அழகாக வடித்திருக்கிறீர் கன்னியப்பரே! ஆயினும் இதில் கொஞ்சம் புலவி நுணுக்கம் சேர்த்திருக்கலாமோ?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-19, 11:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 162

மேலே