காதலியே
நான் ஏன் வரவேண்டும் என்கிறாய்.
உனக்கு எப்படி புரிய வைப்பேன்?
ஒரு அலாதியான அன்பு
உனக்காக காத்திருக்கிறது என்பதை
ஒரு கொடுக்கப்படாத முத்தம்
காற்றில் கரைந்துகொண்டிருக்கிறது
என்பதை..
ஒரு உன்மத்தமான காதல்
உருவாகி உருவாகி உருகிக்கொண்டிருக்கிறது என்பதை
நீ வரும் பாதை வெறுமனே உள்ளது
யார்யாரோ நடக்கிறார்கள்..
அது நீயாகிப்பின் மெதுவாக
காட்சிப்பிழை என சிதறுகிறது..
எவ்வளவு சொன்னாலும் உனக்குப் புரிவதில்லை..
மௌனமான காதல்கள்
வருகைக்காக காத்துக்கிடப்பதில்தான் வளர்கிறது என்று..