காதல்

உடலிரண்டு உறவாடுது
புது உறவு உருவாகுது
அதுவே காதலெனும்
பெயர்கொண்டு சதிராடுது
உடலுறவிற்கு உருவுண்டு
உடலுக்கு உறவுள்ளதால்
காதலுக்கு உருவில்லை
அது காற்றுபோல
அதன் வீச்சை உணர முடியும்
அணைக்கும்போதும் அடிக்கும்போதும்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (4-Jan-20, 4:03 pm)
பார்வை : 261

மேலே