தைப்பொங்கல் வாழ்த்து

முதல் வணக்கம் எங்கள் விவசாயிக்கு
விவசாயி எங்கள் உயிரானவன்
அவனின்றி நாம் வாழ வழி இல்லை
விவசாயி பாதங்கள் பட்ட வயலில் எல்லாம்
பொன் விளையுதே ,போட்டிபோட்டு
மணிக்கதிர்கள் பொலிந்து தள்ளுதே,
விவசாயி மனம் சோர்ந்தால் சோறில்லை நமக்கு ,
வேறில்லை வழி எமக்கு
வேதனையில் பட்டினியில் நாம் துவண்டுதான் விடுவோமே,
உறக்கமும் வந்திடுமா/
உடலும் தான் இயங்கிடுமா /
நம்மை படைத்தவன் இறைவன் ஆகலாம்
பாதுகாப்பவன் விவசாயி அல்லாவா
வாழ்நாளில் சிறந்த நாள் இன்றுதான்
தைப்பொங்கல் தலைசிறந்த நாள் ,
இயற்கையின் சூரியன் பொற்கதிர் கொற்றவன்
ஆனால் இதயமெல்லாம் வென்றவன்
ஏழ்மையின் ஊற்றான எங்கள் விவசாயி ,
அவன் வழியில் நாம் செல்ல இயலாது
இயன்றவரை அவனை ஊக்குவிப்போம்
உள்ளத்தால் உணர்ந்து வாழ்த்துவோம் போற்றுவோம் ,
உலக மக்கள் அனைவர்க்கும் இந்நாளில்
இனிய தை பொங்கல் வாழ்த்து இன்பமுடன்

wish your happy thaippongal ,

எழுதியவர் : பாத்திமாமலர் (15-Jan-20, 11:34 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 460

மேலே