இதைதான் காதலுக்கு கண்ணில்லை என்றார்களோ

எனை ஈர்க்க முயற்சித்த

உன் அத்தனை சேட்டைகளையும்

அணு அணுவாக ரசித்தேன்

விடாது நீ துரத்தியதில்

உன் பிடிவாதம் எனக்குள்
ஏற்படுத்திய

ரசவாதம் நான் அறிவேன்

எனக்காக சண்டையிட்ட

உன் முரட்டுத்தனம் பிடித்ததால்

உன்னை நேசித்தேன்

முன் எப்பொழுதும் காணாத

ஒரு முகத்தை

இப்பொழுது நான் கண்டபின்தான்

திகைத்தேன் இதைதான்

காதலுக்கு கண்ணில்லை என்றார்களோ

எழுதியவர் : நா.சேகர் (28-Jan-20, 10:57 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 116

மேலே