வாழ்க்கை சக்கரம்

தாயுரைத்தாள் :-
நமக்காகவும்
நம் பிள்ளைகளுக்காகவும்
உறவையும் சுற்றத்தையும் அனுசரித்து
உறுதியோடு மனக் கசப்புகளை எதிர்கொண்டு
இல்லத்தில் இன்முகம் காட்டி
இனிய வாழ்க்கை வாழ்கின்றேன் என்று... -
தந்தையுரைத்தார் : -
நமக்காகவும்
நம் பிள்ளைகளுக்காகவும் தான்
பொறுமையாகவும் அமைதியாகவும்
உணர்வுகளை அடகுவைத்து - நித்தம்
உழைக்கின்றேன் அலுவலகத்தில் என்று -
பிள்ளைகள் உரைத்தன பெற்றோர்களிடத்தே :-
உங்களுக்காகத்தான் பள்ளிக்கு செல்கிறோம்
உங்களுக்காகத்தான் பணிக்கு செல்கிறோம்
உங்களுக்காகத்தான் திருமணம் செய்கிறோம்
உங்கள் மகிழ்ச்சிக்காகத்தான் தனிக்குடித்தனம் செல்கிறோம்
எல்லாமே உங்களுக்காகவே.. உங்களுக்காகவே...
என்றுரைத்துவிட்டு... அவர்கள் அவர்களுக்காக...
பிரிந்து சென்றனர் - இறுதியில்
தாய்-தந்தை உரைத்தனர் :-
இதுதான் வாழ்க்கை சக்கரம்
இந்த சக்கரம் வரும்போது...
நம் பிள்ளைகள் - நிச்சயம்
நம் நிலையை உணர்ந்திடுவ ரென்று...!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (5-Feb-20, 6:55 am)
Tanglish : vaazhkkai chakkaram
பார்வை : 289

மேலே